Sunday 14 May 2017

பெய்யென பெய்யும் ?

கணவன் மனைவி மகன் மூணு பேருமே என்னோட பேஷண்ட்ஸ் தான் .
இதுல கணவன் அப்பப்ப இன்னொரு மனைவியோட அப்ஸ்காண்ட் ஆயிருவாரு .அப்புறம் திரும்பி வருவாரு .ஆனா வேலைக்கு போக மாட்டாரு மாத்திரை எல்லாம் ஒழுங்கா எடுக்க மாட்டாரு .இந்தம்மா எப்படியோ துப்பு துலக்கி கண்டுபிடிச்சத்துல அந்த இன்னொரு மனைவியும் என்னோட பேஷண்ட்டாம் .அதனால நீங்க அந்த பொண்ணு வரப்ப கொஞ்சம் மிரட்டுங்கன்னு இந்தம்மா எங்கிட்ட சொல்லிக்கிட்டே  இருந்தாங்க .நாம என்ன போலீசா இல்ல அமைச்சர் சரோஜாவா நெனைச்சாப்பல ஒருத்தர மிரட்ட ?(இதே பிரச்சனைல இவங்க ஒரு தடவை  பூச்சி மருந்தை குடிச்சு ,அப்ப வீட்டுக்காரரை கேட்க போனப்ப ,அவர் எந்த தப்பும் பண்ணல .எனக்கும்  எங்கம்மாவுக்கும் பிரச்சனை அதனால தான் நா மருந்து குடிச்சேன்னு ,இந்தம்மாவே எங்களை  கட் பண்ணிட்டாப்ல ). இப்படியே கதை ஒரு கோணல் பாலன்ஸ்ல போயிட்டிருந்தது .

நேத்து மாமனாரை கூட்டிக்கிட்டு செக் அப்புக்கு வந்தாங்க .ஒரே அழுகை .என்னனா இப்ப ரெண்டு மாசமா ஆள் வீட்டுக்கு வரல .பையனுக்கு மருந்து வாங்கி தரல .இந்தம்மா டெய்லரிங் பண்ணி வச்சிருந்த பணம் + அவரு அப்பாகிட்ட இந்தம்மாக்கு நா scan எடுக்க? சொன்னேன்னு சொல்லி 6000 ரூ எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு அங்க போய்ட்டப்பலயாம் .அது பக்கத்து  ஊரு போல .இந்தம்மா போலீஸ்ல போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க .போலீஸ் சொல்றங்களாம் அவரை கூட்டிக்கிட்டு வாங்க நாங்க கவுன்சிலிங் பண்றோம்ன்னு !

அதுக்குள்ள அந்த பொண்ணுகிட்ட விசாரிக்க ,அந்தம்மா அவங்க ஊரு போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கங்களாம் ."இவங்க கணவர் இங்க இருக்கதா  இவங்க போலீஸ்ல சொல்லியிருக்காங்க .ஒரு மாசம் முன்னாடி இங்க தான் இருந்தாரு இப்ப இல்லனு" .ஆளு என்னமோ அங்க தான் இருக்காராம் .

நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க .அந்த பொண்ண கூப்பிட்டு மிரட்டுங்க .அப்ப அவ அவர விட்டுடுவா .இங்க வந்தா ஒரு நாளைக்கு  பத்து போன் பண்றா அவரை இங்க இருக்க விடாம .நீங்க மிரட்டுனா பயப்படுவா .

நா சொன்னேன் ,அந்த பொண்ண என்னன்னு மிரட்டுறது ?இவரா தானே அங்க போய் உட்காந்துகிட்டு  இருக்காரு ?இதுல அந்த பொண்ணை மட்டும் குறை சொல்லி என்ன பண்றது ?திரும்ப வந்தா உன் பணத்தை தான் திருடிக்கிட்டு  போக போறாரு.  உனக்கு சம்பாதிக்கவும் ஆகல புருஷனுக்கும் ஆகல ,விட்டு தள்ளு .