Sunday 10 December 2017

தேனீ எனக்கு பயப்படவில்லை

தேனீ எனக்கு  பயப்படவில்லை
வண்ணத்துப்பூச்சியை எனக்கு தெரியும்
காட்டின் அழகிகள் என்னை
ஆசையாய் வரவேற்கிறார்கள்

நான் வருகையில் 
இன்னமும் சத்தமாக  ஓடைகள் சிரிக்கும்
இன்னமும் பித்தாக காற்றுகள்  விளையாடும்
ஏன் ,என் கண்களே உன் வெள்ளிப் படலங்கள்
ஏன் ,ஓ கோடை காலமே ?



The Bee is not afraid of me.
By Emily Dickinson 

The Bee is not afraid of me.
I know the Butterfly.
The pretty people in the Woods
Receive me cordially—

The Brooks laugh louder when I come—
The Breezes madder play;
Wherefore mine eye thy silver mists,
Wherefore, Oh Summer's Day?

பொருளுடையாருக்கு

பல நாள் வராத பேஷண்ட் .சில வருடங்கள் இருக்கும் செக்கப்புக்கு வந்தே .இரன்டு வாரங்களுக்கு முன்னர் வந்தார் .ரொம்பவே மெலிந்திருந்தார் .
"வேலை சரியா இல்ல .ரொம்ப குடிக்கிறேன் .சிகரெட் வேற .பத்து மாசமா மாத்திரை வேற போடல .நீங்க கோபப்படுவீங்கன்னு வரல .இப்ப ரொம்ப முடியலனு வந்துட்டேன் ."டெஸ்டுகள் மருந்துகள் எல்லாம் முடிந்து இந்த வாரம் மீண்டும் வந்தார் .

இப்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் .
"எங்கம்மா கூட வருவேன்னு சொன்னாங்க .நா தான் எல்லாம் சரியா போயிட்டு இருக்கு . வேண்டாம்னு சொல்லிட்டேன் .இப்ப குடிக்கறதில்ல .என் கூட கம்பெனி கொடுத்திட்டு இன்னொருத்தர் குடிப்பாரு .அவரும் இப்ப பயந்து போய் நிப்பாட்டிட்டாரு ."ஒரு மாதம் கழித்து வர சொல்லி அனுப்பி வைத்தேன்

திடீரென நேற்று மதியம் இவர் அம்மா போன் பண்ணினார் ."அவனை பத்தி பேசணும் .என்ன கூட கூட்டிட்டு வர மாட்டேன்னுட்டான்."நான் போன்ல சொல்றேனே என்றவுடன் "இல்லை எனக்கு நேர்ல பேசணும்".நேற்று வந்தார் .டெஸ்டுகள் மாத்திரை மருந்துகள் பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்

"இன்ஜினியராக்கும் இவன் .இப்படி தானா தன் லைப்பை கெடுத்துக்கிட்டான் .பொண்டாட்டி அழகா இருப்பா .இவனுக்கு எச்.ஐ.வினு தெரிஞ்சதும் விட்டுட்டு போய்ட்டா .அவள என்ன சொல்ல முடியும் .என்னோட எல்லா பிள்ளைகளும் வசதியா இருக்காங்க .எனக்கு 75 வயசாகுது .இவங்கப்பாவுக்கு 82 வயசாகுது .நமக்கு அப்புறம் இவன் என்ன பண்ணுவான்னு இப்பதான் ஒரு வீடு வாங்கி இவன் பேர்ல பேங்க்ல ஒரு அமவுண்ட் போட்டு வச்சிருக்கோம் .அதுவும் அவன் பேர்லேயும் என் பேர்லேயும் சேத்து போட்டிருக்கோம் .


 இவனுக்கொரு பொண்ணு இருக்கா .இப்பதான் காலேஜ் முடிச்சிட்டு எம்பிஏ சேர போறா .பொண்டாட்டி வந்து கூட பாக்கறதில்ல.ஆனா பொண்ணு கிட்ட இத பத்தி எதுவும் சொல்லல ."

பொண்ணு அப்பாவ பாக்க வருவாளா ?

"இவன் பேர்ல நீங்க எதுக்கு பணம் போடுறீங்க ?அத எனக்கு எடுத்து கொடுங்க .நா காலேஜ் பீஸ் கட்டறதுக்கு வேணும்னு சண்டை போடுறா .குடிகாரனா இருக்கான் .என் அப்பான்னு இவன எப்படி சொல்றது ?என் கல்யாணத்துல என் அப்பான்னு நிப்பாட்ட முடியுமானு  கேக்கறா .காலம் ரொம்ப மாறிப்போச்சு டாக்டர் "



Sunday 12 November 2017

பழந்தூசு

வாழ்பவர் ,கடந்து போகும் பயணி
இறந்தவர் ,வீடு சேர்ந்தவர்
சொர்க்கம்  பூமி இடையே ஒரு குறு பயணம்
அதன்பின்,
நாம் பத்தாயிரம் நூற்றாண்டுகளின் பழந்தூசு மட்டுமே 
நிலாவில் முயல் மருந்துகளை வீணே இடிக்கிறது
ஃபூ -சங்  ,இறவாவரத்தின் மரம் 
எரியும் விறகுகளாக  நொறுங்கி போனது
மனிதன் இறக்கிறான் ,
அவன் வெள்ளை எலும்புகள் வார்த்தையற்று ஊமைகளாகின்றன, 
பச்சை பைன்கள் வசந்தத்தின் வருகை உணரும் போது .
திரும்பி பார்த்து பெருமூச்செறிகிறேன் ,
முன்னும் பார்த்தும் பெருமூச்செறிகிறேன்
மெச்ச என்ன இருக்கிறது  
வாழ்க்கையின்  கணநேர பெருமையில்...




The Old Dust - Poem by Li Po


The living is a passing traveler;
The dead, a man come home.
One brief journey betwixt heaven and earth,
Then, alas! we are the same old dust of ten thousand ages.
The rabbit in the moon pounds the medicine in vain;
Fu-sang, the tree of immortality, has crumbled to kindling wood.
Man dies, his white bones are dumb without a word
When the green pines feel the coming of the spring.
Looking back, I sigh; looking before, I sigh again.
What is there to prize in the life's vaporous glory?


Wednesday 23 August 2017

கடவுள்கள்

தந்தக்  கடவுள்கள்
கருங்காலி கடவுள்கள்
வைர மாணிக்க கடவுள்களும்
கோவில் அடுக்குகளில் மௌனமாய்  உட்கார்ந்திருக்கிறார்கள்
மக்களோ  பயப்படுகிறார்கள்
ஆனால்
இந்த தந்தக்கடவுள்கள்
கருங்காலி கடவுள்கள்
அப்புறம் வைர மாணிக்க கடவுள்களும்
வெறும் அற்ப பொம்மை கடவுள்கள்
அந்த மனிதர்களே செய்தவை


Gods - Poem by Langston Hughes


The ivory gods,
And the ebony gods,
And the gods of diamond and jade,
Sit silently on their temple shelves
While the people
Are afraid.
Yet the ivory gods,
And the ebony gods,
And the gods of diamond-jade,
Are only silly puppet gods
That the people themselves
Have made.

Monday 17 July 2017

நீண்ட ஏக்கம்

அந்த அழகி இருந்த போது
பூக்கள்  நிறைந்திருந்தது அறை
இப்போது அழகி  போய்விட்டாள்
காலியாக கிடக்கிறது கட்டில் 
பூக்கள் தைத்த போர்வை
சுருட்டிக்கிடக்கிறது மெத்தைமேல் ,
யாரும் படுப்பதில்லை .
மூன்று வருடங்கள் ஆன போதும்
இன்னமும் அந்த வாசனை முகர்கிறேன்
வாசனை காலியானது, அழியவில்லை
பெண் போனாள் வரவில்லை
ஏக்கத்தில் பழுக்கிறது விழும் இலை
வெள்ளை பனி கோர்க்கிறது பச்சை பாசியை

Long yearning - 
By Li Po
 

When the beautiful woman was here, the hall was filled with flowers,
Now the beautiful woman's gone, the bed is lying empty.
On the bed, the embroidered quilt is rolled up: no-one sleeps,
Though three years have now gone by, I think I smell that scent.
The scent is finished but not destroyed,
The woman's gone and does not come.
Yearning yellows the falling leaf,
White dew beads the green moss.

Sunday 14 May 2017

பெய்யென பெய்யும் ?

கணவன் மனைவி மகன் மூணு பேருமே என்னோட பேஷண்ட்ஸ் தான் .
இதுல கணவன் அப்பப்ப இன்னொரு மனைவியோட அப்ஸ்காண்ட் ஆயிருவாரு .அப்புறம் திரும்பி வருவாரு .ஆனா வேலைக்கு போக மாட்டாரு மாத்திரை எல்லாம் ஒழுங்கா எடுக்க மாட்டாரு .இந்தம்மா எப்படியோ துப்பு துலக்கி கண்டுபிடிச்சத்துல அந்த இன்னொரு மனைவியும் என்னோட பேஷண்ட்டாம் .அதனால நீங்க அந்த பொண்ணு வரப்ப கொஞ்சம் மிரட்டுங்கன்னு இந்தம்மா எங்கிட்ட சொல்லிக்கிட்டே  இருந்தாங்க .நாம என்ன போலீசா இல்ல அமைச்சர் சரோஜாவா நெனைச்சாப்பல ஒருத்தர மிரட்ட ?(இதே பிரச்சனைல இவங்க ஒரு தடவை  பூச்சி மருந்தை குடிச்சு ,அப்ப வீட்டுக்காரரை கேட்க போனப்ப ,அவர் எந்த தப்பும் பண்ணல .எனக்கும்  எங்கம்மாவுக்கும் பிரச்சனை அதனால தான் நா மருந்து குடிச்சேன்னு ,இந்தம்மாவே எங்களை  கட் பண்ணிட்டாப்ல ). இப்படியே கதை ஒரு கோணல் பாலன்ஸ்ல போயிட்டிருந்தது .

நேத்து மாமனாரை கூட்டிக்கிட்டு செக் அப்புக்கு வந்தாங்க .ஒரே அழுகை .என்னனா இப்ப ரெண்டு மாசமா ஆள் வீட்டுக்கு வரல .பையனுக்கு மருந்து வாங்கி தரல .இந்தம்மா டெய்லரிங் பண்ணி வச்சிருந்த பணம் + அவரு அப்பாகிட்ட இந்தம்மாக்கு நா scan எடுக்க? சொன்னேன்னு சொல்லி 6000 ரூ எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு அங்க போய்ட்டப்பலயாம் .அது பக்கத்து  ஊரு போல .இந்தம்மா போலீஸ்ல போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க .போலீஸ் சொல்றங்களாம் அவரை கூட்டிக்கிட்டு வாங்க நாங்க கவுன்சிலிங் பண்றோம்ன்னு !

அதுக்குள்ள அந்த பொண்ணுகிட்ட விசாரிக்க ,அந்தம்மா அவங்க ஊரு போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கங்களாம் ."இவங்க கணவர் இங்க இருக்கதா  இவங்க போலீஸ்ல சொல்லியிருக்காங்க .ஒரு மாசம் முன்னாடி இங்க தான் இருந்தாரு இப்ப இல்லனு" .ஆளு என்னமோ அங்க தான் இருக்காராம் .

நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க .அந்த பொண்ண கூப்பிட்டு மிரட்டுங்க .அப்ப அவ அவர விட்டுடுவா .இங்க வந்தா ஒரு நாளைக்கு  பத்து போன் பண்றா அவரை இங்க இருக்க விடாம .நீங்க மிரட்டுனா பயப்படுவா .

நா சொன்னேன் ,அந்த பொண்ண என்னன்னு மிரட்டுறது ?இவரா தானே அங்க போய் உட்காந்துகிட்டு  இருக்காரு ?இதுல அந்த பொண்ணை மட்டும் குறை சொல்லி என்ன பண்றது ?திரும்ப வந்தா உன் பணத்தை தான் திருடிக்கிட்டு  போக போறாரு.  உனக்கு சம்பாதிக்கவும் ஆகல புருஷனுக்கும் ஆகல ,விட்டு தள்ளு .

Sunday 29 January 2017

காவல் ? துறை

இது சமீபத்திய மெரினா சம்பந்தப்பட்ட  பதிவல்ல .என் பேஷண்ட் ஒருவரின் சொந்த அனுபவம் பற்றியது .ஒரு விதவை பெண் .ஒரு மகன் மகள் .கணவர் இறந்து இருபது  பிளஸ் வருடங்கள் .மகனுக்கு  இப்போது வயது இருபது .
போனவாரம் என்னை பார்க்க வந்திருந்தார் .

"என் பையன் தூக்கு மாட்டிகிட்டு செத்து போய்ட்டான் ,மேடம் .அவங்கப்பா இல்லாம எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளத்திருப்பேன் .மூணு வருஷத்துக்கு முன்னால ட்ரிபிள்ஸ் போனான்னு புள்ள மேல போலீசுல கேஸ் எழுதிட்டாங்க .அப்புறம் ஸ்டேஷன்ல கூப்பிட்டு ரெண்டு மூணு கையெழுத்து வாங்கிக்கிட்டாங்க .

அப்புறம் சும்மா சும்மா வீட்டுக்கு வருவாங்க .காசு கேப்பாங்க .வருஷத்துக்கு அம்பதாயிரம் வரைக்கும் செலவு பண்ணியிருக்கேன் .வீடு மாத்தி மாத்தி போவேன் .எப்படியோ யாரோ சொல்லிக்கொடுத்து சரியா வந்துருவாங்க .இப்ப ரெண்டு மூணு மாசமா புள்ள, கூப்பிட்டும் போகல .நா தான் தப்பு எதுவும் பண்ணலையே நா ஏன் போகணும்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தான் .இப்ப இந்த வீட்டுக்கு வந்து ஒரு  மாசம் ஆகிருச்சு .

நேத்து வேலைக்கு போயிட்டு வந்தா ,ஹவுஸ் ஓனர் வந்து யாரோ ஒருத்தர் உங்க மகன தேடி வந்தாரு .கலர் ட்ரெஸ்ல இருந்தாரு .ஆனா போலீஸ் மாதிரி இருந்ததுனு சொன்னாங்க .படபடன்னு போய் பாத்தா கதவு பூட்டியிருந்தது .தட்டி தட்டி தெறக்கல. அப்புறம் என் தம்பிய கூப்பிட்டு கதவை ஒடச்சு பாத்தா எல்லாம் உடைஞ்சு போச்சு .

எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளத்தேன். தைரியம் சொல்லி சொல்லி வச்சிருந்தேன் . எப்படியெல்லாம் காப்பாத்தியும் எம்புள்ளைய வாழ விடாம பண்ணிட்டாங்களே ..."

Wednesday 4 January 2017

இனம்

சிலர் அடுத்தவரிடம்  கடிக்கிறார்கள்
ஒரு கா
லையோ 
கையையோ 
எதையோ
 
பல்லில்  கவ்வி
ஆன வேகத்தில் வெளியே ஓடி
மண்ணில் மூடுகிறார்கள்
  
மற்றவர்களோ  பரப்பி வைக்கிறார்கள்
முகர்ந்து பார்த்து முகர்ந்து பார்த்து 
மொத்த மண்ணையும் தோண்டி வைக்கிறார்கள்

அதிர்ஷ்டம் இருந்து
ஒரு கையோ ஒரு காலோ
எதுவோ கிடைத்தால்
அவர்கள் முறை கடிக்க
 

கலகப்பாக ஆட்டம் தொடர்கிறது

கைகள் இருக்கும் வரை
கால்கள் இருக்கும் வரை
ஏதோ ஒன்று இருக்கும் வரை


Race - Poem by Vasko Popa


Some bite from the others
A leg an arm or whatever

Take it between their teeth
Run out as fast as they can
Cover it up with earth

The others scatter everywhere
Sniff look sniff look
Dig up the whole earth

If they are lucky and find an arm
Or leg or whatever
It's their turn to bite

The game continues at a lively pace

As long as there are arms
As long as there are legs
As long as there is anything

Monday 2 January 2017

சின்னம்மாவுக்கு சில அவசர ஆலோசனைகள் ...

பெரியம்மா (நன்றி திரு.பொன்னையன் )இறந்து ஒரு மாசம் கிட்ட ஆகப்போகுது .நாம எல்லாரும் எதிர்ப்பார்த்தப்படியே சின்னம்மா கனத்த மனசோட ? அதிமுகவில பொறுப்புக்கு வந்துருக்காங்க .இந்த நேரத்துல ,என்ன தான் யாரும் கிண்டல் பண்ணினாலும் அவங்களுக்குனு  ஒரு ஸ்டைல் of  dressing  தேவை .

இப்ப மம்தான்னா அந்த பெங்காலி புடவை ,ஹவாய் செருப்பு ,சோனியானா அந்த ஒரிசா காட்டன் புடவை ,மாயாவாதின்னா  குர்தா ,ஹாண்ட்பேக் ,சுஷ்மாக்கு ஒருகை ஸ்வெட்டர் ..இப்படி ஆளுக்கு ஒரு அடையாளம் இருக்கு .

ஜெவே முதல்ல கொபசெவா இருந்தப்ப ஸ்லிம்மா இருந்தாங்க - நல்ல டிஷ்யூ புடவை காட்டினாங்க ,அப்புறம் திடுதிடுப்புன்னு வெயிட்போட்டாங்களோ இல்லையோ கிரேப் புடவை ,கேப்புன்னு மாறினாங்க.அப்புறம் நாம சமீபமா பார்த்த புடவை ,நீள கை தொள தொள பிளவுஸ் ,மேட்சிங் வாட்ச் ,ஒத்தை கல் வைர கம்மல் + கொண்டையோட  அம்மாவா  மாறினாங்க .

இந்த சின்னம்மா வெறும் ஜெ வீட்டு சசியா இருந்தப்ப  பெரிய பட்டுப்புடவை ,வைர ஜிமிக்கி ,வைர மாலை ,வைர நெத்திச்சுட்டி  அடேயப்பா வைர ஒட்டியாணம்ன்னு கலக்கலா வந்தாங்க .அப்புறம் யார் கண்ணு பட்டுச்சோ , ஜெக்கு பிடிக்கலையோ என்னவோ ஒரு ஹவுஸ் வைப் காய்க்கடைக்கு வர ஸ்டைலேயே ரொம்ப நாளா  இருந்தாங்க .

ஜெவோட இறுதி ஊர்வலத்தப்ப இந்தம்மா மறுபடியும் லைம் லயிட்டுக்கு  வந்தாங்க .அப்ப ஒரு சுமார் ரக புடவை ,திப்பையா மேக் அப் ,பெர்ம் பண்ணின மெல்லிசு  ஜடைன்னு  நல்லாவே இல்ல . இதெல்லாம் நல்லா இல்லைன்னு நாம பேசிட்டிருக்கும்  போதே பதவி ஏற்பு அன்னைக்கு சட சடன்னு கெட் அப் மாத்திட்டாங்க.பட்டுப்புடவை ,காலர் வச்ச பிளவுஸ் ,அம்மா கொண்டை ,அம்மா கம்மல் ,அம்மா  வாட்ச்னு .எதையுமே அந்தம்மா கிட்ட விட்டுவைக்கல போல .இந்த கெட் அப்புல தேறினது புடவை மட்டும்தான் .

நம்ம அபிப்பிராயம் என்னனா இந்த ஸ்டைல ஏற்கெனவே ஜெவை பாத்துட்டோம் .அதோட (கோச்சுக்கிட்டாலும் பரவாயில்ல )இவங்க  ஜெ அளவுக்கு அழகில்ல ,ஆனா  exercise பண்ணுவாங்க போல .பிட்டா இருக்காங்க.
சாப்ட் கலர்ல நல்ல கிரேப் சில்க் கட்டலாம்.டெய்லர் சரியில்ல .பிளவுஸ் fitம் சரியில்ல மெட்டிரியலும் சரியில்ல .

அவசரமா ஒரு நல்ல ஹேர் ஸ்டைலிஸ்ட்டா பாத்து ஹேர் ஸ்டைலை மாத்தணும் .பத்து விக் வச்சு பார்த்து நல்லா சூட் ஆகுற ஒண்ண செலக்ட் பண்ண வேண்டியது தானே ?அந்த பட்டர் பிளை வலை -கண்டிப்பா நோ .ஒரு சின்ன போனி டேல் நல்லா  இருக்கும்.

தானே மேக்கப் போட்டுக்குற அளவுக்கு என்ன முடை?கிளோஸ் அப்புல,  சின்ன பிள்ளைங்க மேக்கப் போட்டு விளையாண்ட மாதிரி திப்பை திப்பையா இருக்கு.கண்ணு ரொம்ப சின்னதா தெரியுது .ஒரு கண்ணாடி போட்டா நல்லா இருக்கும் .கம்மல் கொஞ்சம் பெருசு போடலாம் .

மொத்தத்துல ஒரு professional  மேக் ஓவர் தேவைப்படுது .அதி முக்கியமா இவங்களோட அடையாளமா சொல்ற மாதிரி ஏதாவது ஒரு accessory கண்டிப்பா வேணும் .

இதெல்லாம் செட் பண்ணிட்டு முடிஞ்ச அளவுக்கு பேச்சை குறைக்கிறது நல்லது .குரல் தொண்டை கட்டின நிர்மலா பெரியசாமி டப்பிங் பேசுன மாதிரி இருக்கு.அதோட தில்லு முல்லு சுப்பி  மாதிரி ழ ,ள லாம் கஸ்டப்படுது .

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா
நேத்து சசி ,இன்னைக்கு சின்னம்மா ,நாலாம் தேதிக்கு அப்புறம் யாரோ ...