Saturday 20 August 2016

வீடு





எந்த பாதையிலும்
இடித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஏதோ ஒரு வீட்டையேனும்
கதவுகள் கழற்றப்பட்டு
செங்கல்கள் உதிர்க்கப்பட்டு
நிர்வாணமாய் நிற்கிறது
அந்த வீடும்


அவ்வீட்டில்  குடியிருந்த
நினைவுகளையும்
சிரிப்புகளையும்
துக்கங்களையும்
எவரும் அறியாமல்
எங்கோ  தொலைதூரத்தில்
கொண்டு கரைக்கிறது காற்று


மிஞ்சியிருக்கும் 
செங்கலும் மண்ணும்
பழங்கதைகள் பேசிக்கழிக்கின்றன
எஞ்சியிருக்கும் பொழுதுகளை
எல்லாம் களையப்பட்டு
அடித்தளம் அகற்றும் போது
ஓவென்று அழுகிறது மண்
தான் அனாதையென





5 comments:

Unknown said...


கவிதை மிக அருமை!
பூங்குழலி அவர்களே

உங்கள் எழுத்துக்களை தரிசித்து
வெகுநாளாயிற்றே!

கவிதை முள் தைக்கிறது.
ரோஜாக்களிலேயே
நாம் பன்றிகளாய்
புரண்டு கொண்டிருந்த போதும்
பாதாளத்து "முனிசிபாலிடி" பாதகன்
கடப்பாறையும் கையுமாய்
இமயத்துக்கபாலங்களையும்
அல்லவா
நொறுக்கி விட்டுப் போயிருக்கிறான்.
மனிதனுக்கு சீற்றம் வரவேண்டும்
அவன் மூளைக்குள்
முளையடிக்கப்பட்ட‌
"ப்ராபலிடி தியரிக்கு"ம் கூட‌
அணு பிளப்பு அறிவின்
கணித மயிர்கள்
சிலிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆவேசம் வரட்டும்.
அடுத்து வரும் நம்
கை பேசிக்குள்
அவன் செருகியிருக்கும்
கிளி ஜோஸ்ய அட்டை
கட்டாயம் இருக்கும்.
பூமித்தாயின் இந்த‌
புல்லரிப்பும் புளகாங்கிதமும் நமக்கு
புரிந்து போகும்!

அன்புடன் ருத்ரா.

(இது தான் தமிழ் மணத்தில்
என் ஜன்னல்:__


"சிந்து"கின்றோம் ஆனந்தக்கண்ணீர் ruthraavinkavithaikal.blogspot.com

பூங்குழலி said...

எத்தனை முறை சொன்னாலும் போதிய அளவில் நன்றி உரைத்தது போல இல்லை ....மீண்டும் மீண்டும் பல முறை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் ....

Yarlpavanan said...

அருமையான பா வரிகள்
தொடருங்கள்
தொடருவோம்

பூங்குழலி said...

மிக்க நன்றி.

பூங்குழலி said...
This comment has been removed by the author.