Saturday 2 April 2016

வசிய மருந்து

பேஷன்ட் உள்நோயாளிகள் பிரிவில் இருந்தார் .அவர் மனைவி என்னிடம் பேச விரும்புவதாக சொல்லி என் அறைக்கு வந்தார் .

"வாந்தி நிக்கவே இல்லையே!"
முன்னைக்கு இப்ப கொறஞ்சிருக்கே?மருந்தெல்லாம் கிடைக்குது .

"எங்கூர்ல என்ன சொல்றாங்கனா ..."
என்ன சொல்றாங்க ?

"வசியம் மிச்சமிருந்தா  வாந்தி நிக்காதாம் ?"
உங்க வீட்டுக்காரருக்கு வசியம் யார் வச்சது ?(பேஷன்ட் படு சுமார் பெர்சனாலிட்டி )

"அதெல்லாம் நெறைய பொம்பளைங்க வசியம் வச்சு ,அங்க இங்க போய் தான் இந்த நோய் வந்துச்சு .கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் கூட இன்னொரு பொம்பள கூட தான் இருந்தாரு"
முடியாம போன உடனே உங்ககிட்ட வந்துட்டாராக்கும் ?

"ஆமா .நா தான் வசியம் எடுத்தேன் .கையில முருங்க ஏல சார கசக்கி விடுவாங்க .அப்படியே இருந்தா ஒண்ணும் இல்ல, கெட்டியா ஆச்சுன்னா வசியம் இருக்குன்னு அர்த்தம் .பேதியாவறதுக்கு மருந்து கொடுப்பாங்க .வசியம் போயிரும் .முழுசும் போகலைனா தொண்டைல முடியா மொளச்சு வாந்தி வந்துகிட்டே இருக்குமாம் ."

 இப்ப என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்க ?
"வசியம் எடுக்கலாமா ?"
பேதிஎல்லாம் ஆச்சுன்னா ஒடம்பு தாங்காது .ரெண்டு மூணு மாசம் போகட்டும் .
"அதுக்குள்ளே முடி நெறையா மொளச்சா ? இப்ப அவரு தங்கச்சி (போலீஸ் இன்ஸ்பெக்டர் இவர் ) என்ன சொல்றாப்புலனா ,நீ வசியம் வச்சிருந்தா எடுத்திரு .(ஆனா நா எடுக்க தான் செஞ்சேன் .நா வைக்கல .சொன்ன நம்பல )நீ வசியம் வச்சதெல்லாம் சரிதான் .இனிமேல் என்ன ,எடுத்துரு வாந்தி நிக்கட்டும் "

உங்க வீட்டுக்காரருக்கு மஞ்சகாமாலை இருக்கு .அதனால வாந்தி வருது .தொண்டையில் காமெரா (endoscopy பண்ணியிருக்கோம் ) போட்டு பாத்தாச்சு .முடி கிடி எதுவும் உள்ள இல்ல .வேணா அந்த போட்டோ தரேன் .உங்க நாத்தனார் கிட்ட காமிங்க .



6 comments:

Seeni said...

இப்படியாகவும் பலர்...

பூங்குழலி said...

ஆமாம் சீனி இப்படியாகவும் "பலர் " - மெத்த சரி

கீதமஞ்சரி said...

நோயோடு அறியாமைக்கும் சேர்த்தே மருந்துதரவேண்டிய கட்டாயம். வாழ்க உங்கள் பணி.

Avargal Unmaigal said...


டாக்டர் பாடு திண்டாட்டம்தான் உங்க ஊர்ல இப்படி வசியம் அது இதுன்னு சொல்லிகிட்டு வருவாங்க. எங்க ஊருல நாங்க இணையத்துல இப்படி படித்தேன் அப்படி படித்தேன் என்று டாக்டகருக்கு படித்தது மாதிரி டாக்டரிடமே சொல்லி அவர்களை கடுப்பேற்றுவார்கள்......

பூங்குழலி said...

வைத்தியத்தில் மனம் என்பதும் சேர்ந்தது தானே - இதற்கும் விளக்கம் சொல்லாவிட்டால் அவர்களுக்கு ஒரு திருப்தியே இருக்காது .நன்றி கீத மஞ்சரி

பூங்குழலி said...

அதுவும் தான் Avargal Unmaigal.வசியம் மாந்திரீகம் என்றொரு கூட்டம் .கூகிள்ல என்ன போட்டிருக்குன்னான்னு ஒரு கூட்டம் .நடுவில நம்ம பாடு தான் திண்டாட்டம்