Friday 3 January 2014

இன்றும்

ஒரு பெண் .வயது முப்பது இருக்கும் .எச் ஐ வி சம்பந்தமான ஒரு என் ஜி ஓவில் பணிபுரிபவர் .அதனால் இவர் நோய் பாதிப்பு இருப்பவர் என்பதெல்லாம் ஊரில் எல்லோரும் அறிந்ததே.அம்மாவுடன்   கிராமத்தில் வாழ்பவர் .முகமெல்லாம் காயமாக இன்று வந்து சேர்ந்தார் .

"நானும் எங்கம்மாவும் தனியாக  தான் இருக்கோம் மேடம் .எனக்கு எச் ஐ வி இருக்கறது ஊருல எல்லாருக்கும் தெரியும் .ஒரு நாள் ராத்திரி திடீருன்னு முகத்துல ஏதோ எச்சு பட்ட  மாதிரி இருந்தது .வீட்டுல ஒரு பூனை இருக்கு .நா அதுதான்னு நெனச்சு  கண்முழிச்சு பாத்தா ,அடுத்த தெருவுல இருக்காரு ஒரு தாத்தா .அவரு வந்து முத்தம் கொடுத்துட்டு  இருக்காரு .நா  உடனே கோபமா ஊர கூட்டுனா ,ஊருல இருக்கவங்க முக்காவாசி  பேரு அவங்க சாதிக்காரங்க .அவங்க எல்லாரும் சேந்து என்னைய சண்டை புடிச்சாங்க .இதையெல்லாம் பெருசாக்காதேன்னு சத்தம் போட்டாங்க .

நா கேக்காம போலீசுல கம்ப்ளைன்ட்  கொடுத்திட்டேன் .அவங்க சாதிக்காரங்க
எல்லாருமா சேந்து என்னைய அடிச்சு போட்டாங்க .அந்த ஊருல வைத்தியம் கூட பாக்க முடியல .பக்கத்துக்கு டவுன்ல ஆயிரம் ரூபா வாடகை கொடுத்து வீடு புடிச்சு தங்கி இருக்கேன்.என்ன பண்றதுன்னே புரியல . "

என்ன சொல்வது ?



4 comments:

Seeni said...

Kevala ulakamunga...

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப அநியாயம்...

பூங்குழலி said...

சாதி பெண் என்று பேதங்கள் நிறைந்த உலகம்

பூங்குழலி said...

அநியாயம் என்பதை விட வக்கிரம்