Friday 11 February 2011

ஒன்று எங்கள் ஜாதியே

இந்த பெரியவர் பல நாட்களாக சிகிச்சைக்கு வருபவர் தான் .சொந்த ஊர் ஆந்திரா .என்ன சொன்னாலும் சரியென கேட்டுக் கொள்வார் ."நீ என்ன சொல்றியோ ,அத நான் கேட்டுக்குறேன் ,நீ எப்ப ஆஸ்பத்திரிக்கு வரணும்ன்னு சொல்றியோ அப்ப வரேன்,வீட்டில எனக்கொண்ணும் வேல இல்ல .பொண்ணை எல்லாம் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சி .அதனால நா எப்பவும் ப்ரீ தான் ."ஒவ்வொரு தடவையும் இதை சொல்லாமல் போக மாட்டார்


போன வாரம் வந்தவர், போகும் போது திடீரென ,"நீ பிராமினா ?"என்று கேட்டார் .நான் ஒண்ணும் சொல்லாமல் சிரித்த போது ,"பிராமினா ?ரெட்டியா ?நாயுடுவா ?"என்று மீண்டும் கேட்டார் .


திரும்ப திரும்ப கேட்கவும் எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது எனக்கு ."நான் என்னவாக இருந்தால் என்ன ?அதை நான் சொன்னாலும் உங்களுக்கு எப்படி புரியும் ?"என்று கேட்டவுடன் ,"அதில்லம்மா ,எங்க ஊரில எனக்கு நிறைய கோழிக்கறி கிடைக்கும்.நல்லா சுத்தம் பண்ணி ஐஸ் போட்டு கொண்டு வந்தா ,அப்படியே இருக்கும் .டேஸ்ட்டும் அவ்வளவு நல்லா இருக்கும் .என் பொண்டாட்டி டாக்டருக்கு கொண்டு போங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கா .நா தான் சாப்பிடுவாங்களோ என்னவோ ,நா கேட்டுக்கிட்டு வரேன் ன்னு சொல்லிட்டு வந்தேன் .அதான் அப்படி கேட்டேன் ,"என்று அவர் சொல்லவும் அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்துவிட்டது எனக்கு ."உங்களுக்கு தெரியவேண்டியது நான் வெஜிடேரியனா இல்லை நான்-வெஜிடேரியனா என்பது தான் ,நான் ரெட்டியா ,பிராமினா என்பது இல்லை .நான் கண்டிப்பாக நான் -வெஜிடேரியன் தான் ,"என்று சொல்லி அனுப்பி வைத்தேன் .




No comments: