Tuesday 21 September 2010

கனவு



ஒத்திப் போட்ட கனவுக்கு
என்னவாகும்?
வெயிலில் திராட்சை போல்
உலர்ந்து போகுமா ?
புண் போல் புரையோடி
பின் சீழாய் வடியுமா ?
அழுகின கறி போல்
நாற்றம் எடுக்குமா ?
ஜீராவில் ஊறிக்
காய்ந்த பண்டம் போல்
சீனிப் படிந்து போகுமா ?

கனமான சுமை போல்
அது
தொய்ந்து தொங்குமோ ?

இல்லை வெடிக்குமோ ?



A Dream deferred
Langston Hughes

What happens to a dream deferred?

Does it dry up
like a raisin in the sun?
Or fester like a sore--
And then run?
Does it stink like rotten meat?
Or crust and sugar over--
like a syrupy sweet?

Maybe it just sags
like a heavy load.
Or does it explode?

Wednesday 8 September 2010

எதைக் கொண்டு வந்தோம் ?

சிகிச்சைக்கு வந்த ஒரு வயதான தம்பதி .கணவர் சில மாதங்களுக்கு முன் இறந்து போனார் .சில நாட்களுக்கு முன்னால் மனைவி வந்து போனார் .இவரின் மகனும் இவரும் ஒரே ஊரில் இருக்கிறார்கள் .

மகனுடன் இருக்கிறீர்களா என்று கேட்ட போது ,"ஒட்டிக்கும்ன்னு தனியாவே இருக்க சொல்லிட்டான் "என்று கோபமாக சொன்னார் .உங்களை அழைத்து போகப் போவதாக சொன்னாரே என்று சொன்ன போது ரொம்பவே கோபமான அவர் ,"அவன் கெடக்கறான் பிராடு பய .பேசுறதெல்லாம் பொய் .அப்பா இங்கே இருந்தப்ப ஒரு ராத்திரி கூட வந்து பாத்துக்கலப்பா .அம்மாவே தான் எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டேன் .வீட்டுக்கு கூட போய் வாசல்ல எறக்கி விட்டுட்டு அப்படியே கெளம்பி போய்ட்டான் .நர்ஸ் போடுப்பா ,காசு நா கொடுக்கறேன் சொன்னப்ப கூட கேக்கல .நானே தான் கஷ்டப்பட்டு தூக்கி வச்சு,குளிப்பாட்டி எல்லாம் செஞ்சேன் .
அப்பா செத்தப்புறம், நா தான் பாக்காம கொன்னுட்டேன் ன்னு மருமக எல்லார்கிட்டயும் சொல்றா . இப்ப சொத்துக்கு கேஸ் போட்டிருக்கான் .இவனும் வக்கீலுமா சேந்து எங்கிட்ட நைசா பேசுறாங்க .வக்கீல் கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்பா ,இப்படி என்னைய ஏமாத்தி வாங்குன சொத்து எதுவும் நெலைக்காதுன்னு .
ஆமாப்பா ,அம்மாவுக்கு ரொம்ப கோபம்பா .அப்பா ,எல்லாமே அவரே தான் செய்வாரு .எங்கிட்ட எதையும் சொல்லக் கூட மாட்டாரு .கேட்டாலும் ஒனக்கு புரியாதுன்னு சொல்லிருவாரு .அவரு நெறைய படிச்சவரு .நா வெறும் எட்டு தாம்ப்பா படிச்சிருக்கேன் .கரென்ட் பில் ,ரேஷன் கார்டு எதையும் பாக்க கூட விட மாட்டாரு .அப்படியெல்லாம் பாத்தவரே எல்லாத்தையும் போட்டுட்டு தாம்ப்பா போனாரு .இவன் மட்டும் என்ன தூக்கிக்கிட்டா போகப் போறான் .எங்கிட்ட ஒண்ணு பேசுறான் ,பொண்டாட்டி கிட்ட ஒண்ணு பேசுறான் .மொத்தத்துல பொய் பேசுறான் ."

இதே மகன் ,தந்தை மருத்துவமனையில் இருந்த போது எங்கம்மா எங்கப்பாவ சரியாகவே பார்க்கவில்லை .நிறைய படித்த என் அப்பாவிற்கு பொருத்தமில்லாதவர் என் அம்மா .நானே என் அப்பாவை என்னோடு அழைத்து சென்று வைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன் என்று சொன்னவர்.