சில நாட்களுக்கு முன்னால் ஒரு நோயாளியை அதிகப்படியான வயிற்று வலியுடன் அழைத்து வந்தார்கள் . சில நாட்களாக அவர் அதிகம் குடித்ததாக சொன்னார்கள் . தாங்க முடியாமல் துடியாய் துடித்து கொண்டிருந்தவருக்கு முதலுதவிகள் செய்த பின் ,பரிசோதனைகள் செய்ததில் கணையம் ரொம்பவே புண்ணாகி இருப்பது போல் தெரிந்தது .அதற்கான சிகிச்சை வசதிகள் எங்களிடம் இல்லாததால் வேறு ஒரு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தோம் .
நான்கு நாட்களுக்கு முன்னால் ,இவரின் மனைவி சிகிச்சைக்கு வந்தார் .எப்படி இருக்கிறார் என்று விசாரித்த போது ,நான்கு நாட்கள் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்ததாகவும் ,இப்போது நலமாக இருப்பதாகவும் சொன்னார் .அதோடு ,"ரொம்ப மாசமா குடிக்காம இருந்தார் .இப்பத் தான் தொடர்ந்து இப்படி அதிகமா குடிச்சு ஒடம்புக்கு வந்திடுச்சி" என்று சொன்னார் .இவ்வளவு நாளா குடிக்காம இருந்தவரு ஏன் திடீருன்னு இப்படி குடிச்சாரு? "என்று கேட்ட போது ,"கட்சியில இருக்காரு .எலக்க்ஷன் வேலைக்கு பென்னாகரம் போனாரு ,அங்க தான் இப்படி ஊத்தி விட்டு வேல வாங்கியிருக்காங்க .மூணு மாசமா அங்க தான் இருந்தாரு .அதில வந்த வென தான் ."
Wednesday 21 April 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment