Tuesday 13 April 2010

சொல்லாமல் ....

நான்கு வருடமாக தொடர்ந்து சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கும் நோயாளி இவர் .எப்போதும் சிரித்த முகத்துடனும் ஒரு உற்சாகத்துடனும் இருப்பார் .போன முறை வந்த போது ரொம்பவே டல்லாக தெரிந்தார் .

கேட்ட போது ,"ஒடம்புக்கு ஒண்ணுமில்லமா ,எல்லாம் வெசனம் தான் என்று சொன்னார் ."எம்மக இஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்சுக்கிட்டு போயிட்டா.கஷ்டப்பட்டு படிக்க வச்சேன் .அந்த படிப்ப முடிச்சிருந்தா கூட பரவாயில்ல .அதையும் பாதியில விட்டுட்டு ஹாஸ்டல்ல இருந்து ஓடிப்போயிட்டா . சொல்லவே இல்ல .ஸ்கூல் முடிஞ்ச ஒடனே ,ஒரு வருஷத்துல காசு சேத்துட்டு கட்டி கொடுத்திருறேன்ன்னு சொன்னேன் .இல்ல கண்டிப்பா படிப்பேன்னு சொன்னா .கடன வாங்கி சேத்து விட்டேன் .இப்படி பண்ணிட்டா .சொல்லவே இல்ல .இப்படிம்மா ன்னு சொல்லியிருந்தா கூட படிப்ப முடிச்சு கட்டிக் கொடுத்திருக்கலாம் .ஒண்ணுமே சொல்லல்ல இந்த பொண்ணு.


போலீஸ் ஸ்டேஷணுல அவங்கப்பா பொண்ணே இல்லன்னு கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டாரு .என்னையும் போடச் சொன்னாரு .எனக்கு கையெல்லாம் நடுங்குது .அவ அசங்காம அழகாக கையெழுத்து போடுறா .இதுக்கு தானாடி ஒன்னைய படிக்க வச்சேன்னு கேட்டா ,பதிலே இல்ல .எம்பக்கம் திரும்பிக் கூட பாக்கல.அந்த இன்ஸ்பெக்டர் சொல்றாரு ,ஏம்மா உங்கம்மா நிக்குறாங்க ,ஏதாவது பேசுமா ன்னு .வாயே தொறக்கல .எப்படி கடன வாங்கி நகைய செஞ்சி போட்டேன்னு சொன்னா ,ஒடனே செல்லு ,செயினு எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு நிமிந்து நிக்குறா .ஒண்ணும் சொல்லாமையே இருந்திட்டியே ன்னு கேக்குறேன் ,பதிலே சொல்லாம நிக்குறா .


என்னமோம்மா ,சாகப் போயிட்டேன் .என் சின்னப் பொண்ணு தான் ,எனக்காக இரும்மா ன்னு சொல்லி அழுதா.என்
வீட்டுக்காரு ரொம்ப குடிப்பாரு .வீடு பூரா தொரத்தி அடிப்பாரு .இந்த பிள்ளைங்களுக்காக தான் எல்லாமே பொறுத்து போறேன் .இப்படி சொல்லாமையே இருந்து மோசம் பண்ணிட்டா . காலேஜுல அவங்க அப்பாவுக்கு தெரியாம சொல்லிட்டு வந்திருக்கேன் .வந்தா சேத்துக்கோங்க .பீஸ நா கட்டுறேன்னு .படிப்பாவது மிஞ்சட்டும்."

பாவம் ,போகும்வரை அழுது கொண்டே இருந்தார் .


1 comment:

சந்தனமுல்லை said...

:-(

தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன், பூங்குழலி!

http://sandanamullai.blogspot.com/2010/04/blog-post_12.html