Wednesday 10 March 2010

தி லாஸ்ட் சிம்பல் (The lost symbol)

போன வாரத்தில் தான் "தி லாஸ்ட் சிம்பல் " படித்து முடித்தேன் .முந்தைய கதைகள் போல் இல்லை என்றாலும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது .அதில் சொல்லப்பட்டிருக்கும் இடங்களும் சடங்குகளும் உண்மையே என்று ஆரம்பத்திலேயே கூறப்பட்டிருப்பது இன்னமும் ஆச்சரியத்தை கூட்டியது .இதை எழுத ஐந்து வருடங்கள் ஆனது ஆச்சரியமில்லை தான்.


நேற்று இரவு டிஸ்கவரியில் வந்த ஒரு நிகழ்ச்சி .தாஜ் மகாலைப் பற்றியது .நிஜமாகவே ஷா ஜகானின் காதல் மனைவிக்காக மட்டும் கட்டப்பட்டதா தாஜ் மகால் என்பதை ஆராய்ச்சி செய்தார்கள் .கொஞ்சம் மேலோட்டமாகவே இருந்தது .இவர்கள் சொல்ல வந்தது என்னவென்றால் ,ஷா ஜகான் ,குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் சொர்க்கத்தை அச்செடுத்தாற்போல் தாஜ் மகாலைக் கட்டியிருக்கிறார் என்பதே .இதற்கு சான்றாக தாஜ் மகாலில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் உள்ளனவாம் .ஆனால் எதற்காக இப்படி கட்டினார் என்பதையும் கொஞ்சம் பேசினார்கள் .அதற்கு விடை ஷா ஜகான் தனக்கு கொடுத்துக் கொண்ட பட்டங்களில் இருக்கிறதாம் .இந்த பட்டங்கள் கடவுளுக்கு நிகரானவர் என்பதாக பொருள் தருபவை (ஆனால் பல மன்னர்களின் பட்டங்கள் இப்படி தானே இருக்கின்றன ).அதனால் வழக்கமான கல்லறை தோட்டங்கள் போல் அல்லாமல் தாஜ் மகால் அமைந்திருக்கிறது என்றார்கள் .இறுதியாக அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் ,ஷா ஜஹான் மிகவும் நல்ல அரசர் என்று கூறினார் .இன்னொரு வெளிநாட்டு பேராசிரியரோ ,அவர் ஆடம்பர மோகம் கொண்டு அகங்காரம் கொண்டவர் என்று சொன்னார் .இப்படியாக இரு கருத்துகளை சொல்லி நிகழ்ச்சியை முடித்தார்கள் .

இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது ,"தி லாஸ்ட் சிம்பல் "புத்தகம் தான் .டான் பிரவுன் தனது படைப்புகளில் சரித்திரத்தை அழகாக கலந்து கதை சொல்கிறார் . இதில் நிஜமான இடங்கள் வருவது பெரும் ஈர்ப்பாக இருக்கிறது ."டா வின்சி கோட்" வெளிவந்த போது சுஜாதா தமிழில் "பொன்னியின்
செல்வனுக்கு " பிறகு யாருமே சரித்திரம் புனைவுகளோடு கலந்த தளத்தில் கதை சொல்ல முற்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் .ஏன் ?


No comments: