இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நோயாளியின் உறவினர் என்று சொல்லி சிலர் வந்தார்கள் .வேறு மருத்துவமனையில் இருக்கும் அவரை இங்கே மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் .அதோடு நோயாளி சிறிது மனநிலை பாதித்த நிலையில் இருப்பதையும் சொன்னார்கள் .
சுமார் ஐந்து மணியளவில் நோயாளியை அழைத்து வந்தார்கள் .வந்தவர் செய்த ஆர்ப்பாட்டம் கொஞ்சமில்லை .உள்ளே வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவரை ஒரு வழியாக வார்டு வரை இழுத்தே வந்துவிட்டார்கள் .இதில் கொஞ்சம் சமாதமான அவர் ,திடீரென்று கர்ணன் கதையை சொல்லத் தொடங்கினார் .செடேட் செய்ய ஊசிகள் போட்ட பின் தூங்கவில்லை என்றாலும், அமைதியானார் .சிகிச்சைக்கும் ரத்தம் எடுப்பதற்கும் ஒத்துழைத்தார் .
அடுத்தும் சற்று அமைதியாகவே தான் இருந்தார் .நேற்று என்னுடன் பணிபுரியும் இன்னொரு மருத்துவர் ,ரொம்ப அழகு ,வயது அறுபத்தி நாலு .இவர் வழக்கம் போல் எல்லா நோயாளிகளை பார்த்து விட்டு இவரையும் பார்க்க போன போது ,உடனிருந்த நர்சிடம் ,"நீங்க வெளிய இருங்க ,இவங்க என் அத்த பொண்ணு .இவங்களுக்கும் எனக்கும் கணக்கு இருக்கு ,அத நா பேச வேண்டியிருக்கு .அதனால எங்கள தனியா விடுங்க ,"என்று ஒரே போடாக போட்டிருக்கிறார் .பயந்து போன அந்த மருத்துவர் இந்த நொடி வரை அவர் அறை பக்கமே போகமால் நடுங்கிப் போயிருக்கிறார் . இதுவும் ஒரு வகை occupational hazard போலும்.....
Wednesday 17 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
hahahahaha
நல்லாயிருந்தது மேடம்...
உங்க பிரண்ட் டாக்கடர்ட்ட சொல்லுங்...
“மேடம் உங்களுக்கு வயசு 64 மறந்துடாதீங்கன்னு...”
Post a Comment