Tuesday 19 January 2010

கலைவாணர்.காம்







கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ;இவரை எனக்கு அறிமுகம் செய்தவர் என் தந்தை .இவரை பற்றியும் இவரின் நகைச்சுவை பற்றியும் அவர் வாழ்வில் கரும்புள்ளியாகிப் போன லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை பற்றியும் அப்பா சிலாகித்து பேசியதில் நான் இவர் ரசிகையானேன் .

சென்ற வருடம் இவரின் நூற்றாண்டு .சமகால தலைவர்களையும் தோள் தந்த நண்பர்களையும் கட்சிக்கென பாடுபட்ட பலரையும் மறந்து போன இந்த காலகட்டத்தில் இவரின் நூற்றாண்டும் கடந்து போனது .பெண்ணுரிமை ,பொதுவுடைமை என பல கருத்துகளை நகைச்சுவையாக சொல்லி விளங்க வைத்து ,கொடுத்தே நலிந்து போன இந்த மாபெரும் கலைஞரின் நூற்றாண்டும் முன் எத்தனையோ பேருடையதைப் போல பெரிய ஆரவாரமின்றி கடந்து போனது .

இன்று எம்.ஜி.ஆர் ரூப்குமார் அவர்களின் ஒரு வலைப்பூவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் கலைவாணரைப் பற்றிய வலைப்பக்கத்திற்கான தொடுப்பு ஒன்று இருந்தது .மிகச் சிறப்பாக சிரத்தையுடன் அமைக்கப்பட்டிருந்த அந்த பக்கங்களில் கலைவாணரின் வாழ்க்கை குறிப்புகள் ,அவரை பற்றிய செய்திகள் ,அவரை பற்றிய கருத்துகள் ,பல புகைப்படங்கள் ,அவரின் சில பாடல் காட்சிகள் என்று வலையேற்றியிருக்கிறார்கள் . ஆங்கிலத்தில் இருக்கும் இந்த பக்கம் விரைவில் தமிழிலும் வரும் என முகப்பு பக்கம் சொல்கிறது .

தொய்வின்றி செயல்பட்டால்
கால சுழலில் புகழுடன் இருந்தும் பெயர் மறைந்து போன பல கலைஞர்கள் போல் அல்லாமல் கலைவாணரின் புகழை ஆவணப்படுத்த அவரின் நூற்றாண்டின் நினைவாக துவங்கப்பட்டிருக்கும் இந்த வலைப்பக்கம் ஒரு முக்கிய கருவியாக இருக்கும் என்று நம்புகிறேன் .

http://kalaivanar.com/


No comments: