Saturday 12 December 2009

செருப்"பூ"

ஊருக்கு போயிருந்த போது தோட்டத்திற்கு சென்றிருந்தோம் . அப்பா ,அம்மா ,பத்தி பெரியம்மா ,நாகூர் மாமா (அப்பாவின் மாமா மகன் ). இந்த தோட்டத்தில் தான் என் தாத்தா ,பாட்டி ,அத்தை ,பெரியப்பா ஆகியோரின் கல்லறைகள் இருக்கின்றன .மற்ற இடங்களில் ஏதோ பயிரிடப்பட்டிருந்தது .கல்லறைகள் இருந்த இடத்தை சுற்றி மட்டும் செம்பருத்தி ,அரளி என்று பூக்கள் பூத்து சின்ன அளவில் என்றாலும் அழகிய பூந்தோட்டமாக இருந்தது .

இதை நான் பார்த்துக் கொண்டிருக்கையில் என் கண்ணை பறித்தது அரளி செடியில் பூத்திருந்த ஒரு செருப்"பூ".ஒரு நீல நிற ஹவாய் செருப்பு ஒன்று துளையிடப்பட்டு கட்டி தொங்க விடப்பட்டிருந்தது .இது ஏதும் பறவைகளை விரட்ட தொங்க விட்டிருக்கிறார்களோ என்று நான் கேட்டுக் கொண்டிருக்கும் போதே , மாமா சொன்னார் ,"அழகா பூத்தோட்டம் போட்டிருக்காகள்லா அதனால ,கண்ணு பட்ரும்ன்னு இப்பிடி செருப்பக் கட்டி தொங்கவிட்டிருக்காங்க .மத்தபடி காக்காவுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தம் கூட இல்ல ."


1 comment:

Kavinaya said...

அப்படியா. புதிய செய்தி. நீங்க இட்டிருக்கும் தலைப்பையும் ரசித்தேன் :)