Thursday 19 November 2009

அத்தை சொன்ன கதை -6

என் தாத்தா நல்ல உயரமும் அதற்கேற்றார் போல் உடல் வாகும் உடையவர் என்று சொல்வார்கள் .என் சின்ன அத்தை மீது பாசம் அதிகம் அவருக்கு .அவரை பிரியமாக ராசாத்தி என்றே கூப்பிடுவாராம் .இதில் கொள்ளை பெருமை என் அத்தைக்கு .

என் அத்தைக்கு முதல் குழந்தை பிறந்த போது தாத்தாவுக்கு அறுபத்தைந்து வயது இருந்திருக்கும் .பிரசவத்தை தொடர்ந்து ரத்தப் போக்கு அதிகம் இருந்ததாம் அத்தைக்கு ."பிளீடிங் ரொம்ப ஆகிக்கிட்டு இருந்தது .எங்கம்மா சொன்னா ,குளிச்சிட்டு கொஞ்சம் வெளிய வந்து உக்காரு .அசதி கொறையும்ன்னு. குளிக்கப் போனா தல சுத்தி விழுந்திட்டேன் .அறுவது கிலோவுக்கு கொறையாம வெயிட் இருந்திருப்பேன் .பூசணிக்கா விழுந்தா மாதிரி பொத்துன்னு சத்தம் கேட்டிருக்கணும் .வெளிய இருந்த எங்கய்யா ஒடனே வந்துட்டாரு .அப்படியே என்ன ரெண்டு கைலேயும் தூக்கி கொண்டு போய் ,அலாக்கா கட்டில் மேல போட்டாரு .வேட்டியெல்லாம் ரத்தம் .எம்பிள்ளைய என்ன செஞ்சீங்க ன்னு கத்திக்கிட்டே எங்கம்மா ஓடி வந்தா .அந்த வயசிலேயும் எங்கய்யாவுக்கு அவ்வளவு பலம் இருந்தது . "



தாத்தாவின் பலம் மட்டுமல்ல அவர் அத்தை மேல் வைத்திருந்த பாசமும் தெரிந்தது எனக்கு .


No comments: