Thursday 1 October 2009

கல்லானாலும்

தொடர்ந்து சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கும் நோயாளி இவர். ஆரோக்கியமாகவே இருக்கிறார் .எதை சொல்லும் போதும் இவரிடம் ஒரு தயக்கம் இருக்கும் .பயந்தே பேசுவது போல் இருக்கும் இவரின் பேச்சும் .வந்தவுடன் எல்லாம் சொல்லிவிட்டு மாத்திரைகள் எழுத ஆரம்பிக்கும் போதே ,"வீட்டுல பேசனும்ன்னு சொன்னா "என்று ஆரம்பிப்பார் .உடனே கைபேசியில் பேசுவார் .பாதி நேரம் பேசுவது மகளாக இருக்கும் ."அம்மா வெளியே போயிருக்காங்க "என்று பதில் வரும் .இல்லை அம்மாவை தேடி அழைத்து வந்து பேச வைக்கும் அந்த வாண்டு .எப்படி இருக்கிறார் என்பதை மட்டும் விசாரித்துக் கொள்வார் இவர் மனைவி .

ஒரு முறை இவர் மனைவியின் தம்பியும் உடன் வந்திருந்தார் .வீட்டுல பேசுங்க என்று இவர் சொன்ன உடனே ,அவர் சொன்னார் ,"நா தான் வந்திருக்கேன்ல ,நா சொல்லிக்கிறேன் அவ கிட்ட ."இவர் ,"இல்ல அவளே பேசிரட்டும் என்று இருவரும் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர் . நான் "பரவாயில்லை நான் பேசிடறேன் ,"என்று இந்த பிரச்சனையை முடித்து வைத்தேன் .இவர் மச்சினர் சொன்னார் ,"எங்கக்கா ,சாட்டையை அங்கிருந்தே சுத்தி எங்க எல்லாத்தையும் ஆட்டி வைக்கிறா ."

பாவம் இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த நோயை வைத்திருக்கும் கணவரின் நிலையால் பரிதவிக்கும் அந்த பெண்ணின் நிலை சங்கடம் தான் .


No comments: