Wednesday 21 October 2009

அத்தை சொன்ன கதை 4

தாத்தா அமைதியானவர் என்றே சொல்வார்கள் .புகைப்படத்தில் கூட சாந்தம் தவழவே அமர்ந்திருப்பார் .இவரைப் பற்றி என் அத்தை சொன்ன கதை ஒன்று .


"எங்கய்யா ரொம்ப அமைதியா இருப்பாரு .ஆனா கோவம் வந்துதுன்னா முன்னால நிக்க முடியாது .ஒரு தடவ எங்க பெரிய அண்ணன எதுக்கோ ,என்னன்னு நெனவு இல்ல ,அடிக்க வந்தாரு .ஒடனே எங்கண்ணே ஓடிட்டாங்க .வெரட்டிக்கிட்டே வந்தாரு .ரெண்டு பெரும் விடாம வெரட்டிகிட்டே கோவில் வரைக்கும் வந்துட்டாங்க .(சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ).


கோவில்கிட்ட எங்கம்மா தண்ணி எடுத்துகிட்டு வந்திட்டிருந்தா .எங்கண்ணே ஒடனே எங்கம்மா கைய பிடிச்சிக்கிட்டாங்க .பிடிக்க போனா ,எங்கம்மா கொடத்தொட நிக்கா .அண்ணன பிடிக்க போனா இவ விழுந்துருவா .எங்கையா பாத்துட்டு பேசாம வந்துட்டாரு .வீட்டுக்குள்ள வந்து பேசாம ஒக்காந்திருந்தாரு.எங்கண்ணனும் தைரியமா ,உள்ள வந்தாங்க .உள்ள வரும் போதே பிடிச்சிட்டாரு எங்கய்யா .கதவிடுக்குல கைய வச்சி ,நங்கு நங்குன்னு சாத்திட்டாரு.

இன்னொரு தடவ எங்க சின்னண்ணன அடிச்சிப்புட்டாரு .அவன போயி அடிச்சீங்களேன்னு ஏச்சு ஏச்சு ,ஒரு நாள் பூரா ஏசுனா எங்கம்மா.இவன் அடி தாங்க மாட்டாம்லா. "


சின்ன வயது முதலே என் அப்பா ஒல்லியாகவும் என் பெரியப்பா கொஞ்சம் பூசினாற்போலவும் இருப்பார்களாம் .


No comments: