Monday 21 September 2009

பிள்ளை மனம்

ஒரு பதிமூன்று வயது பெண் குழந்தை .கருவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டது .போன வாரம் தந்தையுடன் சிகிச்சைக்காக வந்திருந்தாள் .

தந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ,மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்கிறாளா என்று கேட்ட போது ,சரியாகவே சாப்பிடுவதாக சொன்னார் தந்தை.பின்னர் ,இந்த நோய் இருப்பது உங்கள் மகளுக்கு தெரியுமா என்று ஜாடையாக கேட்ட போது ,"இன்னமும் தெரியாது "என்று அந்த தந்தை சொன்னார் .உடனே குறுக்கிட்ட அந்த பெண் ,"எனக்கு எச்.ஐ.வி இருப்பது எனக்கு தெரியும் "என்றாள்.

எப்போது தெரியும் என்பதை விசாரித்த போது ,"ஒரு வருடம் முன்னதாகவே தெரியும் "என்றும் சொன்னாள் ."உங்கள் மகளுக்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியாதா ?"என்று தந்தையைக் கேட்ட போது ,"தெரியாது "என்றே சொன்னார் அவர் .இதைக் கேட்டதும் அந்த பெண் கேவிக் கேவி அழத் தொடங்கினாள் .


தனியே அழைத்துச் சென்று ஆறுதல் சொல்லி கேட்ட போது ,"எனக்கு போன வருஷம் இங்க ஒரு தடவ வந்து போன பிறகு நான் வெளியே கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன்.எனக்கும் எச்.ஐ.வி இருக்கதால தான் என்னைய இங்க மட்டும் கூட்டிட்டு வராங்கன்னு தெரிஞ்சுது .ரொம்ப அழுக அழுகையா வந்தது .இப்போ பரவாயில்ல .ஆனா எங்கப்பா இன்னும் எனக்கு தெரியாதுன்னு நெனைச்சிகிட்டு இருக்காருன்னு தெரிஞ்சவுடனே அழுக வந்திருச்சி ."
எத்தனை வேதனை இந்த சிறு வயதில் ...

Friday 11 September 2009

புத்திர சோகம்

ஒரு தம்பதியர் .கணவரை சிகிச்சைக்கென சேர்த்திருந்தார்கள் .மூளைக் காய்ச்சல் ,காச நோய் என்று பல நோய்கள் .இவர் மருத்துவமனையில் இருக்கும் போது உடனிருந்தது மனைவியும் தந்தையும் .அம்மா ஊரிலிருப்பதாகவும்,அம்மாவைப் பார்க்க வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டே இருப்பார் .அம்மா பயந்து வரவில்லை என்று சொன்னார்கள் .பின்னர் அம்மாவை பார்த்துவிட்டுத்தான் சிகிச்சை செய்து கொள்வேன் என்று வம்பாக வீடு சென்றார் ,பாதி சிகிச்சையிலேயே .சில மாதங்கள் சென்ற பின் ,இவர் மனைவி சிகிச்சைக்கு வந்த போது தான் ,இவர் ஊரிலேயே இறந்து போனது தெரிய வந்தது .


போன வாரம் இவர் மனைவி வந்திருந்தார் .தன் மாமியார், கணவரின் மரணத்திற்கு இவரைக் காரணம் காட்டியதால் தன் அம்மா வீட்டோடு இருந்து பணிக்கு சென்று கொண்டிருக்கிறார் .போன மாதம் தன் கணவரின் நினைவு நாளுக்கு ஊருக்கு சென்றதாகக் கூறினார் .அவரின் அம்மா ,அப்பா எப்படி இருக்கிறார்கள் என்று கேட்ட போது ,"அம்மா ,அம்மா ன்னு உயிரா இருந்திட்டு இவர் போய்ச் சேர்ந்துட்டார் .அவங்க இவரு போன பிறகே கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தாங்க .இப்ப முழுசா மன நோயாளி மாதிரி ஆயிட்டாங்க .அவன் சாகல ,எதுக்கு தெவசம் பண்றீங்க ன்னு கேக்குறாங்க .நீ ஏன் தாலி போட்டுக்கல ன்னு என்னயக் கேக்குறாங்க .அங்க ஒரு டாக்டர் மருந்து கொடுத்திருக்கார் .அதெல்லாம் எனக்கு வேண்டாம்ன்னு சொல்றாங்க .இவரு கடைசியில என்னையும் என் பிள்ளைங்களையும் தவிக்க வச்சதும் இல்லாம ,அவங்க அம்மாவையும் பைத்தியமாக்கிட்டு போயிட்டாரு ,"என்றார் அழுதபடி .

Wednesday 9 September 2009

நீ

நீ
நட்சத்திரங்கள் இல்லாத இரவைப்போல் என்றிருப்பேன்
உன் கண்களை காணாதிருந்திருந்தால்
நீ
கனவுகள் இல்லாத உறக்கம்போல் என்றிருப்பேன்
உன் கானங்களை கேளாதிருந்திருந்தால்...



Quiet Girl
by Langston Hughes


I would liken you
To a night without stars
Were it not for your eyes.
I would liken you
To a sleep without dreams
Were it not for your songs.

Thursday 3 September 2009

எங்காவது


எங்காவது நிச்சயம் இருக்கத்தான் வேண்டும்
பார்த்திராத முகமும் கேட்டிராத குரலும்
ஒரு பதில் எனக்கு தராத ,
பதிலே தந்திராத ஒரு இதயமும் ...ஐயோ பாவம் நான் ....

எங்காவது மிக அருகிலோ வெகு தொலைவிலோ
கடல் தாண்டி நிலம் தாண்டி விழிபரப்பும் தாண்டி
திசையற்று திரியும் நிலவுக்கப்பால் -அதை
இரவிரவாய் தொடரும் விண்மீன்களுக்கப்பால்



எங்காவது மிக அருகிலோ வெகு தொலைவிலோ
தடுக்க ஒரு சுவரோடும் ஒரு வேலியோடுமட்டும்
பசும்புல்வளர்ந்த விரிப்பில் விழுந்து கிடக்கும்
இறந்துகொண்டிருக்கும் வருடத்தின் இறுதி இலைகளோடு மட்டும்


Somewhere or Other
by Christina Rossetti

Somewhere or other there must surely be
The face not seen, the voice not heard,
The heart that not yet - never yet - ah me !
Made answer to my word.

Somewhere or other, may be near or far ;
Past land and sea, clean out of sight ;
Beyond the wandering moon, beyond the star
That tracks her night by night.

Somewhere or other, may be far or near ;
With just a wall, a hedge, between ;
With just the last leaves of the dying year
Fallen on a turf grown green.

Wednesday 2 September 2009

காஸபியான்க்கா


எரியும் தளத்தில் நின்றான் சிறுவன்
அவனை விடுத்து பிறர் போயின பின்பும்
போரின் சிதைவுகள் வெளிச்சமிட்டே
மாண்டவர் மீது சுடர்ந்தது நெருப்பு

எழிலாய் பொலிவாய் நின்றே இருந்தான்
புயலை ஆள பிறந்தவன் போல
சிறுபிள்ளை போல் தோன்றி, செருக்குடனே,
நரம்புகளில் வீரம் ஊறிப் பிறந்தான்


உருண்டு பரவி கனன்றது நெருப்பு
தந்தை சொல்லின்றி அவன் போவதாயில்லை
மரணத்தின் மயக்கத்தில் கீழே தந்தை
இனி இவன் குரல் அவர் கேட்பதற்கில்லை

உரக்கக் கேட்டான் ,"சொல்லுங்கள் தந்தையே ,சொல்லுங்கள்
இன்னமும் என் பணி முடியவில்லையா ?"
மகனின் நினைவற்றும் கிடந்தார் தலைவர்
அவர் நிலை இவன் அறியவுமில்லை

"பேசுங்கள் தந்தையே” மீண்டும் கேட்டான்
இப்பொழுதேனும் நான் போகலாமா ?"
குண்டுகள் முழங்கி பதிலைச் சொல்லின
வேகமாய் பரவிக் கொண்டி ருந்தது நெருப்பு

நெற்றியில் நெருப்பின் அனல்மூச் சுணர்ந்தான்
காற்றில் அலையும் கேசத்திலுணர்ந்தான்
மரணத்தின் விளிம்பில் காவல் தனியாய்
நம்பிக்கை குறைந்தும் துணிவுடன் நின்றான்


மீண்டும் ஆனால் அதிரக் கேட்டான்
"என் தந்தையே, நான் இருக்கத்தான் வேண்டுமா ?"
பாய்மரம் வழியே திரை வழியேயும்
அவன் மீதேறி சுழன்று போனது நெருப்பு

கலத்தைப் போர்த்தி அட்டகாசச் சுடராய்
சரசரவென்று கொடியை எட்டிப் பிடித்தே
வானில் ஆடும் கொடி போல் தாவி
பெருக்கெடுத்து வீரச்சிறுவன்மேலே படர்ந்தது நெருப்பு

தொடர்ந்து வெடித்தது இடியின் ஓசை
சிறுவன்! ஐயோ ! எங்கே ?எங்கே?
துகள்களை வெகுதூரம் இறைத்துப் போன
காற்றைக் கேளுங்கள் ....காற்றைக் கேளுங்கள்


கொடியும் கம்பமும் சுக்கானும் கலத்தோடழிந்தன
தம் பணி சிறப்பாய் முடித்தனவாய்
அங்கே அழிந்தது அனைத்திலும் மேன்மையாய்
வாய்மை பூண்ட சிறு இதயம் மட்டும்….



CASABIANCA
by: Felicia Dorothea Hemans (1793-1835)
THE boy stood on the burning deck
Whence all but him had fled;
The flame that lit the battle's wreck
Shone round him o'er the dead.

Yet beautiful and bright he stood,
As born to rule the storm;
A creature of heroic blood,
A proud, though childlike form.

The flames rolled on -- he would not go
Without his father's word;
That father, faint in death below,
His voice no longer heard.

He called aloud -- "Say, father, say,
If yet my task is done?"
He knew not that the chieftain lay
Unconscious of his son.

"Speak, father!" once again he cried,
"If I may yet be gone!"
And but the booming shots replied,
And fast the flames rolled on.

Upon his brow he felt their breath,
And in his waving hair,
And looked from that lone post of death
In still, yet brave despair.

And shouted but once more aloud,
"My father! must I stay?"
While o'er him fast, through sail and shroud,
The wreathing fires made way.

They wrapt the ship in splendor wild,
They caught the flag on high,
And streamed above the gallant child,
Like banners in the sky.

There came a burst of thunder sound--
The boy -- oh! where was he?
Ask of the winds that far around
With fragments strewed the sea!--

With mast, and helm, and pennon fair
That well had borne their part--
But the noblest thing that perished there
Was that young, faithful heart.