Tuesday 21 July 2009

அம்மன் கொடை




கரகம் தான் அன்றைய மட்டும் அல்ல கொடையின் ஹைலைட் போலும் .




இரவில் வீடு திரும்பிய போது மணி பன்னிரண்டு இருக்கும் .திரும்பி வர வழியே இல்லை .கோவிலை சுற்றி ஒரு சுற்று பாதை வழியாக தான் வர முடிந்தது .அப்படியொரு கூட்டம் .வழியில் அப்படியே புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்தேன் .




கோவிலுள் ஆண்கள் உட்கார்ந்து பூ கட்டிக் கொண்டிருந்தனர் .ஓலையில் மஞ்சள் நிற பூக்களை பரப்பி வைத்து அவர்கள் பூ கட்டுவது பார்க்கவே அழகாக இருந்தது .அவர்களை முதலில் ஒரு புகைப்படம் எடுக்க ,சரியாக விழவில்லை அது .மீண்டும் எடுக்க நான் முற்படும் போது ,சட்டென நிமிர்ந்து பார்த்த ஒருவர் ,"அட போட்டோ படமா எடுக்கீங்க ?"என்று கேட்டப்படியே பெரிதாய் சிரித்து ஒரு போசும் கொடுத்தார்.


1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்