Thursday 28 May 2009

ஆந்திராவின் உள்துறை அமைச்சர்

பொதுவாக பெண்களுக்கு அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்படும் போது அதிகமாக வழங்கப்படுவது சமூக நலத் துறை .ஏதோ பெண்களுக்கென ஏற்படுத்தப்பட்ட துறை போல் ஆகிப் போனது இது .


இந்த வழக்கத்தை முறிக்கும் விதமாக ,புதிதாக பதவியேற்றுள்ள ஆந்திர மந்திரி சபையில் ,முதல் முறையாக ஒரு பெண் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் .சபீதா இந்திரா ரெட்டியின் கணவரும் இதே பொறுப்பை முன்பு வகித்தது குறிப்பிடத்தக்கது .


மூன்றாவது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர் முந்தைய மந்திரிசபையிலும் அமைச்சராக இருந்தவர் .

வாழ்த்துவோம் .


No comments: