Friday 22 May 2009

போன மச்சான் திரும்பி வந்தா ?

ஓட்டு எண்ணி முடிச்சதுமே
ஓடித்தானே போனாக
பொட்டியை தான் கட்டிக்கிட்டு
கூட்டமாக போனாக


ஆளுக்கொரு ஆசயின்னு
ஆரவாரமாக போனாக
அவசரமா எடம் புடிக்க
வெரசா தான் போனாக


பேசித்தான் முடிக்கனுமின்னு
பவுசாதான் போனாக
கோட்டையை தான் புடிப்போமுன்னு
பெருசாக போனாக


என்ன போயி என்ன பண்ண
எவரத் தான் நொந்து அழ
கட விரிச்சும் விக்காம
வந்த கத எங்க சொல்ல


ஊருக்கு வந்தப்ப
ஒறவாட மறக்கலியே
ஏனின்னு கேக்கலையே
சொன்ன வார்த்த மீறலியே


பேசிப் பேசி தீரலையே
சிக்கலொன்னும் அவுரலையே
கேட்டத தான் கொடுக்கலையே
சொல்ல சொல்லு போதலையே


சேத்து வச்ச சில்லறையில்
பங்கு தர மறுக்கலியே
எதுக்கு கோவம் கொண்டாக
என்ன கொற கண்டாக


ராவெல்லாம் கண் முழிச்சு
காத்திருந்தும் கூடலையே
ப்ளேன் ஏறி போறோமுன்னு
சொன்ன பின்னும் எளகலையே


ஊராளும் மன்னரெல்லாம்
நாடாளும் நாளும் எப்போ
இனி நண்டுக் கறி திங்குறப்ப
நடுத் துண்டு வாரதெப்போ


போன மச்சான் திரும்பி வந்தா
ஊரு பாத்து சிரிச்சிடுமே
மொகம் பாத்து கேலியாதான்
கை கொட்டி நகச்சிடுமே


பரிதவிச்சு நிக்குறாக
கண்கலங்கி ஏங்குறாக
கடைக்கண் தொறந்து பாருமம்மா
வாட்டத்த தான் தீருமம்மா


No comments: