Tuesday 7 April 2009

ரத்த உறவுகள்

ஒரே குடும்பத்தில் அக்கா ,தம்பி ,தம்பியின் மனைவி என்று மூவரும் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் .

இது எவ்வாறு நேர்ந்தது என்று விசாரித்ததில் ,முதலில் நோயினால் தம்பி பாதிக்கப்பட்டிருக்கிறார்.இவரிடம் இருந்து இவர் மனைவி பாதிக்கப்பட்டிருக்கிறார் .இது இந்த நோயைப் பொறுத்த வரை சகஜம் .
அக்கா மகளையே மணந்திருக்கிறார் இவர் .ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் அக்காவிற்கு இவர் ரத்தம் தர நேர்ந்திருக்கிறது .அதில் அவருக்கும் நோய் பரவி விட இப்போது மூவரும் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் .

தக்க காரணங்கள் இருந்தால் அன்றி ரத்தம் ஏற்றுவது தவிர்க்கப் படவேண்டும் ,கொடுப்பவர் எத்தனை அறிந்தவராக இருந்தாலும் .இதனால் இது போன்ற நோய் தொற்று அபாயங்கள் மட்டுமன்றி ரத்த தானம் பெறுவது ஒரு உறுப்பு தானம் பெறுவதற்கு சமம் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .


2 comments:

sankarkumar said...

unga blog arumai doctarey..

பூங்குழலி said...

ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு