Thursday 5 March 2009

பேர் சொல்ல

கண் கசக்கி நின்ன உடனே
கை நீட்டி நிக்கிறீங்க
நீட்டின்ன கை அத்தனையும்
கைக்குட்டை பிடிச்சிருக்கு


பிழிய பிழிய அழுதுவிட்டா
பாரம் கொஞ்சம் எறங்கி விடும்
சத்தமாக அழுதுவிட்டா
சங்கடம் கொஞ்சம் தீர்ந்து விடும்


பூவான எம் மனசு
சொமந்த பாரம் எறங்கிடுச்சி
கல்லுன்னு நெனைச்சதெல்லாம்
கற்கண்டா தெரிஞ்சிரிச்சி


எவர் வந்து அழைப்பாரோ
எமன் வந்து அழைக்கு முன்னே
எந்த பேர் சொல்வாரோ
என ஏங்கி நின்னு அழுகையிலே


மதுரையிலே வீரம் உண்டு
மதுரையிலே மல்லி உண்டு
மல்லிக்கும் மேலான
பூ மனசு அங்க உண்டு


சீனா தானான்னு எளக்காரமா பாட்டிருக்கு
அந்த பாட்டெழுதி வச்ச பய
வாயெல்லாம் வெந்து போக
பூங்குழலி ன்னு வாய் நெறைய
பேரு சொல்லி அழைச்சாங்க
புன்ணான மனசுல தான்
மருந்தள்ளி தெளிச்சாங்க
செல்வியை திருமதியா
கொண்ட அய்யன் நீ வாழ்க
உன் குலமெல்லாம் சங்கருன்னு பேர் சொல்ல
சந்தோஷமா தான் வாழ்க


No comments: