Thursday 5 March 2009

வெள்ளம்

மழை பெஞ்ச கோலத்தை
கண்ணெதிர சொல்லிப்புட்ட
நீ அழுத கண்ணீரில்
என் தலை மாட்ட நனைச்சி புட்ட


என்னூரில் பெஞ்ச மழை
உன் நெஞ்ச நனைச்சிருச்சே
நீ அழுத கண்ணீரில்
என் மனசெல்லாம் கரஞ்சிருச்சே


ஒத்தையில நீ அழுதா
எம்மனசு தாங்காது
உன் கண்ணீரின் ஈரத்திலே
என் கண்மையும் காயாது


ஊருக்குள்ள வெயிலெல்லாம்
கொளுதினப்ப பெய்யலியே
வருணனுக்கு தவமிருந்து
கும்பிட்டப்ப பொழியலையே
ஊர் கழுதைக்கு கல்யாணம்
செஞ்சப்ப வரலையே
என்ன கொற தீக்க
இப்ப ஊரு மூழ்க வந்திச்சோ


வயல் உழுக போன
எம்மாமன் மனம் தாங்கலையே
நெலமே ஏரி ஆக
கண்ட கோலம் பொறுக்கலையே
நெல்லடுக்கி வச்ச களமெல்லாம்
முளைச்சுதிப்ப வயலாக


கோடி கோடி பணத்தை கொட்டி
ரோட்டை போட்டு வச்சாங்க
போட்ட ரோட்டை காங்கலியே
போன எடம் தெரியலையே


தண்ணி வந்தா பேப்பர்
கப்பல் விடும் சின்னதெல்லாம்
படகெடுத்து வந்த கோலம்
கண்ணுக்குள்ள மாறலையே


என்ன சொல்லி என்ன பண்ண
பெஞ்ச மழை பெஞ்சது தான்
மவராசி அழாதே
எம்மனசு கத்தி அழும்
கண்ணீர துடைச்சிட்டு
பத்திரமா வந்து சேரு


No comments: