Wednesday 18 March 2009

வாழ்க்கை துணைநலம்

சிகிச்சைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் தம்பதியர் இவர்கள் .
இருவரும் பாதிக்கப் பட்டிருப்பது வேதனை .இவர்களுடைய ஒரே மகனிடமும் இதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கின்றனர் .மனைவி சொல்லலாம் என்று சொல்ல இவர் நான் இறந்து விடுவேன் என்று மிரட்ட, போய்க் கொண்டிருக்கிறது இது தொடர்கதையாய் .


கணவர் எப்பொழுதும் நான் செய்த தவறால் என் மனைவியும் பாதிக்கப்பட்டுவிட்டாள் என்று புலம்பிக் கொண்டே இருப்பார் .இதே புலம்பல் தொடர்ந்து மன நோய் அளவுக்கு கொண்டு சேர்த்தது அவரை .பின்பு ,மன நோய்க்கு வேறு சிகிச்சை எடுக்க வேண்டி வந்து சரியானார்.


போன
வாரம் வந்த போது கூட இவர் மனைவி சொன்னார் ,"எல்லாம் நான் தான் கையிலே எடுத்துக் குடுக்க வேண்டியிருக்கிறது .டவல் முதல் பிரஷ் வரை ,"என்று .நானும் விளையாட்டாக ,"கெடுத்து வைத்திருக்கிறீர்கள் அவரை ,"என்று சொன்னேன் .உடனே அவர் ,"ஆமாம் டாக்டர் ,இப்பேற்பட்ட மனைவிக்கு நான் தான் துரோகம் செய்து விட்டேன் .என்னால் அவளும் சேர்ந்து சிரமப்படுகிறாள்,"என்றார் கண்களில் நீர் மல்க .


இது மட்டுமே நோய் வரக் காரணமில்லை .வேறு வழிகளிலும் வந்திருக்கலாம் .இது குறித்து வருந்துவதை தவிர்த்து இனி செய்ய வேண்டியதை கவனியுங்கள் என்று பலவாறாக ஆறுதல் ,ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தோம் .


மனைவியிடம் இத்தனை நேசம் வைத்திருப்பவர் ஒரு நிமிடம் நிதானித்திருந்தால் வருமுன் தடுத்திருக்கலாமே ?

No comments: