Thursday 12 March 2009

கர்ப்பசித்தர்


நன்றாக நினைவிருக்கிறது எனக்கு .நானும் என் அத்தையும், அத்தை வீட்டு பால்கனியில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தோம் .

சில நாட்களுக்கு முன்பு தான் என் சித்தப்பாவின் குல தெய்வம் கோவிலுக்கு சென்று திரும்பியிருந்தேன் .அவர்கள் குல தெய்வம் பெயர் "பெத்தனாஷி அம்மன்" .இவர்கள் வழக்கப்படி பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட இந்த பெயர் துவங்கும் படிதான் பெயர் வைக்க வேண்டும் .இதற்கென "பெத்தம்மா","சின்ன பெத்து " என்றெல்லாம் பெயர் வைப்பார்கள் .ரொம்ப வேடிக்கையாக தோன்றியது இது எனக்கு .


என் அப்பா குடும்பத்தில் எல்லோரும் நாத்திகர்கள் ஆனபடியால் ,இவர்கள் கோவிலின் பூசாரிகள் என்று தெரிந்தாலும் ,ஆலடிப்பட்டி வைத்தியலிங்கசாமி கோவில் ரொம்ப சிறப்பு பெற்றது என்று அறிந்தாலும் வேறு எந்த விவரமும் தெரியாது எனக்கு .


இந்த பெத்து விஷயத்தை சொல்லி நான் சிரித்துக் கொண்டிருந்த போது சொன்னார் ,"நமக்கும் குல தெய்வம் இருக்கு ,பேரு கருப்பஸ்தர்",என்று .ஆச்சரியமாக இருந்தது எனக்கு ."கோயில் உள்ளேயே தான் இந்த சாமியும் இருக்கு ",என்று இடத்தையும் குறிப்பிட்டுக் கூறினார் .


பின்னாளில் தெரிய வந்தது எனக்கு ,இவர் பெயர் கருப்பஸ்தர் இல்லை கர்ப்ப சித்தர் என்று .இவருக்கென வெள்ளியில் ஒரு கிரீடம் செய்து விட்டு வந்தார் என் அம்மா .இப்போது கோவிலில் இவருக்கென ஒரு தனி பிரகாரம் அமைத்திருப்பதாகக் கூறினார்கள்.போய்ப் பார்க்க வேண்டும் .


No comments: