Tuesday 10 March 2009

யாரை நம்பி

என் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் பெண் இவர் .கணவர் முதலில் சில மாதங்கள் சிகிச்சைக்கு வந்தாலும் பின்னர் சரியாக வரவில்லை .இந்த பெண் சரியாக வந்தாலும் மருந்துகளை சரியாக உட்கொள்ளவில்லை .



ஒரு நாள் மூளைக் காய்ச்சலோடு கணவரைக் கொண்டு வந்து சேர்த்தார் .நல்லமுன்னேற்றம் ஏற்பட வீடு திரும்பினார் அவரும்.பின் சில நாட்களிலேயே நோய் ரொம்பவும் முற்றிப் போய் இறந்தும் போனார் .


இது இப்படியிருக்க இந்த பெண் கண்ணீரும் கம்பலையுமாக நேற்று வந்து நின்றார் .விசாரித்ததில் ,இந்த பெண் ஏற்கெனவே திருமணமானவராம்.தன் கணவர் ,இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு இந்த நபரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் .இவர் உடல் நலமோடு இருந்த மட்டும் இவரை ஏற்றுக் கொண்ட அவர் குடும்பத்தினர் ,இப்போது ஒரு வேளை உணவு கூடக் கொடுக்க மறுப்பதாகக் கூறினார் . தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் கூறினார் .இவர் குழந்தைகளும் இவரிடம் பேசவே மறுக்கின்றனராம் .
இந்த பெண்ணுக்கு இப்போது மிஞ்சியது எச்.ஐ.வி மட்டுமே .


நாங்கள் கேட்டோம் ,"இத்தனை பிரச்சனைகள் இருக்கும் போது,நாங்கள் எத்தனை முறை சொன்ன பின்னும் , நீங்கள் ஏன் மருந்துகளை அவரை சாப்பிடச் செய்யவில்லை ?"அதற்கு அவர் ,"நான் என்ன கூறினாலும் எனக்கு கடவுள் வழி காட்டுவார் என்று சொல்லி அவர் மறுத்துவிட்டார்",என்றார் .

நான் சொன்னேன்," கடவுள் ,மருத்துவமனையைக் காட்டினார் ,மருந்துகளைக் காட்டினார் .அதை சாப்பிட வேண்டிய வேலையை உங்களிடம் கொடுத்தார் ,நீங்கள் அதை புரிந்து கொள்ளாமல் நோயை அதிகமாக்கிக் கொண்டீர்கள் "என .


1 comment:

Anonymous said...

எவடி அவ?