Thursday 12 February 2009

இறந்து போனவர்கள்

சிறு பிள்ளையாய்
பயத்துடன் எட்டிப் பார்த்த ஞாபகம்
அடுத்த தெரு பாட்டியின் இறுதி ஊர்வலம்
முன்னால் சில பேரின் கொட்டும் ஆட்டமும்
பின்னால் சில பேரின் அழுகையும் ஓலமும்
என எதற்கும் அசையாமல் போனாள் பாட்டி
பல நாளாய் என் கனவில் மட்டும்
பயம்காட்டிக் கொண்டே இருந்தாள் பிணமாய்


பள்ளி படிக்கையில்
தாத்தா இறந்து போனார்
அம்மாவின் சித்தியின் பெருங்குரல் அழுகை
ஆச்சியின் அவர் அம்மாவின் ஒப்பாரி சத்தம்
பெரிது பெரிதாக ரோஜா மாலைகள்
என விமர்சையாய் தேரில் போனார் தாத்தா
பயமும் இல்லை துக்கமும் இல்லை
என் கனவிலும் அவர் தெரிந்ததில்லை பிணமாய்


கல்லூரி நாட்களில்
பாட்டியின் மரணம்
பல நாள் போராட்டத்தின் நிச்சயித்த முடிவுதான்
அத்தையின் விசும்பல் அப்பாவின் கதறல்
மெலிந்த தேகத்தில் பட்டு போர்த்தி
இன்னமும் சில நாள் இருந்திருக்கலாமோ ?
இன்னமும் அன்பாய் நாம் நடந்திருக்கலாமோ?
என ஏக்கங்கள் தெளித்து போனார் பாட்டி


ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அத்தை
நான்கு ஆண்டுகளுக்கு முன் பெரியப்பா
என இன்னமும் சிலரை காலம் கொண்டது
வெற்றிடமாக இன்னமும் இவர்கள் விட்ட இடங்கள்
எத்தனை கண்ணீரிலும் நிரம்ப மறுத்து
நினைவில் வாழ்பவர்கள் இறந்தே போகாதவர்கள் என்றறிந்த காலம்
இவர்கள் இறந்தது பல நேரம் நினைவே இல்லை


3 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

"உழவன்" "Uzhavan" said...

இக்கவிதை கற்பனையல்ல; நிஜம்.
படித்து முடிக்கையில் எனது தாத்தா, பாட்டியெல்லாம் நினைவில் வருகிறார்கள்.


உழவன்
http://tamizhodu.blogspot.com
http://tamiluzhavan.blogspot.com

பூங்குழலி said...

இதை படித்த பலரும் இதை தான் சொன்னார்கள் .நன்றி உழவன்