Thursday 22 January 2009

தந்தை மகற்காற்று நன்றி ....

இதை எழுதுவதா வேண்டாமா என பல முறை யோசனை செய்துகொண்டேயிருந்தேன் .உலகத்து நடப்புகளில் எத்தனையோ விசித்திரங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன .அதில் இதுவும் ஒன்று தான் .

ஒரு தம்பதியர் சிகிச்சைக்கு வந்தனர் .இருவரும் காதல் மணம் செய்துகொண்டவர்கள் . மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் பரிசோதனைக்கு சென்றிருக்கிறார்கள் .அதில் மனைவிக்கு எச்.ஐ.வி நோய் இருப்பது தெரிய வந்துள்ளது .கணவருக்கு நோய் இல்லை .மேலும் பரிசோதனைகள் செய்ததில் மனைவிக்கு நோயினால் பாதிப்பு அதிகமாகவே இருந்தது .

வழக்கம் போல் ஆலோசனை செய்த போது ,இந்த பெண்ணின் தந்தைக்கு எச்.ஐ.வி இருந்தும் அவர் அதற்கு சரியான சிகிச்சை செய்யாமல் இறந்ததும் தெரிய வந்தது .அதோடு மட்டுமல்லாமல் அவர் இந்த பெண்ணுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதும் தெரிய வந்தது .சில நாள் கழித்து இதை உணர்ந்து கொண்ட இவர் தாயார் இந்த பெண்ணை விடுதியில் சேர்த்தாராம் .

என்ன சொல்லி தேற்றுவது ?

அந்த பெண் கூறினார் ,"என் அம்மாவிற்கும் நோய் இருக்கிறது .ஆனால் அவர்கள் சிகிச்சைகள் பற்றி தெரியாததால் சிரமப்படுகிறார்கள் ,நான் அவர்களையும் சிகிச்சைக்கு அழைத்து வருகிறேன் .ஆனால் எனக்கு நோய் இருக்கும் விஷயம் அவர்களுக்கு தெரிய வேண்டாம் " ,என்று...


No comments: