Thursday 6 November 2008

தங்கப்பல் தாத்தா


தங்கப்பல் தாத்தா என் பாட்டிவீட்டின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் .பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்று சொல்வதை விட பக்கத்துக்கு வாசல்காரர் என்று சொல்வதே சரியாக இருக்கும் .பாட்டி வீட்டுக்கு வலது பக்க வீடு இவருடையது .பாட்டி வீட்டிற்கும் இவர் வீட்டிற்கும் இடையே இவர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பார் .இவர் வேறு எதுவும் செய்து பார்த்ததாக எனக்கு நினைவில்லை .இவர் பெயருக்கு காரணமான தங்கப்பல்லையும் நான் பார்த்ததில்லை .






சில வருடங்களுக்கு பின்னரே எனக்கு தெரிந்தது ,இவர் என் பாட்டியின் தம்பி என்பதும் இவர் பெயர் ஆறுமுகம் என்பதும் .




என் பாட்டி மிகவும் உடல் நலம் குன்றி இருந்த வேளையில் என் அண்ணன்கள் இருவர் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருந்தனர் .அப்போது பாட்டியிடம் என் அத்தை ,"தம்பி மகன்கள் வந்திருக்கின்றனர் "என்று சொல்லிய போது பாட்டி உடனே கேட்டாராம் ,"நாகூரும் தர்மருமா ?" என்று .தங்கப்பல் தாத்தாவின் மகன்கள் இவர்கள் இருவரும் .என் பாட்டி தன் தம்பி மீது கொண்டிருந்த பாசம் அது .




No comments: