Saturday 16 August 2008

அன்புடைமை ?

நான் மருத்துவம் பயின்ற நாட்களில் நடந்தது இது .
சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்த பெண்..தையல் எடுக்கும் நாளில் நான் அதுவரை தையல் பிரிக்காததால் என் முறையானது .
எனக்கு தெரியும் அனுபவம் இல்லாததால் வலி சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று .

ஆரம்பிக்கும் முன் சொன்னேன் ,"கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்க"என்று.முடியும் வரை அந்த பெண் ஒரு முனகல் கூட எழுப்பவில்லை .முடித்தவுடன் "ரொம்ப வலித்ததா ?"என்று நான் கேட்டதற்கு
அந்த பெண் சொன்னாள் ,"உங்கள் அன்பான வார்த்தையில் என் வலி தெரியவில்லை "என்று .

சாதாரணமாக தோன்றினாலும் யார் குற்றம் இது ?
சிகிச்சைக்கு வரும் நோயாளியிடம், அன்பாகக் கூட வேண்டாம் ,குறைந்த பட்சம்
மரியாதை கூட இன்றி ,வாடி போடி என்று பேசி பழகியது யார் குற்றம் ?

பணம் தரும் நோயாளிகளிடம் நாம் இவ்வாறு பேசத் துணிவோமா ?

நம்மிடம் இருந்து விலகி வேறு மருத்துவரிடம் செல்லக் கூடும் என்ற நிலை இருந்தால் இவ்வாறு செய்வோமா ?

அதிகமோ குறைவோ இவர்களுக்கு பணி புரிய தானே நாம் ஊதியம் பெறுகிறோம் ?


No comments: