Friday 4 April 2008

ஆலடிப்பட்டி


இது என் ஊர் .வளம் கொழிக்கும் தாமிரபரணியும் நீர் கொழிக்கும் குற்றாலமும் இரண்டு பக்கங்களிலும் மாற்றந்தாயின் மனதோடு நீர் மறுக்க வற்றிய குளங்களும் காய்ந்த கிணறுகளும் எங்கள் ஊரில் அதிகம் .
என் அப்பா பிறந்தது வளர்ந்தது ஆரம்ப கல்வி படித்தது எல்லாம் இங்கு தான் .
மண் பொய்ததால் இங்கு உழவு விடுத்து பீடி சுற்ற பழகியவர் பலர் பீடி சுற்றியதால் புகையிலையின் தாக்குதலில் காச நோய் கண்டவரும் பலர் . என் தந்தை தலைமுறையில் பலர் ஆசிரியர் பயிற்சி பயின்றனர் .
பல ஊர்கள் பொறாமைப்படும் வைத்தியலிங்கசாமி கோவில் உண்டு இங்கே .கோவிலின் பங்குனித் திருவிழாவும் சித்திரை கொடையும் சிறப்பானவை .இந்தக் கோவிலின் பூசாரிக் குடும்பமாக இருந்து நாத்திகராக மாறியவர்கள் என் அப்பாவும் பெரியப்பாவும் .