Sunday 29 January 2017

காவல் ? துறை

இது சமீபத்திய மெரினா சம்பந்தப்பட்ட  பதிவல்ல .என் பேஷண்ட் ஒருவரின் சொந்த அனுபவம் பற்றியது .ஒரு விதவை பெண் .ஒரு மகன் மகள் .கணவர் இறந்து இருபது  பிளஸ் வருடங்கள் .மகனுக்கு  இப்போது வயது இருபது .
போனவாரம் என்னை பார்க்க வந்திருந்தார் .

"என் பையன் தூக்கு மாட்டிகிட்டு செத்து போய்ட்டான் ,மேடம் .அவங்கப்பா இல்லாம எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளத்திருப்பேன் .மூணு வருஷத்துக்கு முன்னால ட்ரிபிள்ஸ் போனான்னு புள்ள மேல போலீசுல கேஸ் எழுதிட்டாங்க .அப்புறம் ஸ்டேஷன்ல கூப்பிட்டு ரெண்டு மூணு கையெழுத்து வாங்கிக்கிட்டாங்க .

அப்புறம் சும்மா சும்மா வீட்டுக்கு வருவாங்க .காசு கேப்பாங்க .வருஷத்துக்கு அம்பதாயிரம் வரைக்கும் செலவு பண்ணியிருக்கேன் .வீடு மாத்தி மாத்தி போவேன் .எப்படியோ யாரோ சொல்லிக்கொடுத்து சரியா வந்துருவாங்க .இப்ப ரெண்டு மூணு மாசமா புள்ள, கூப்பிட்டும் போகல .நா தான் தப்பு எதுவும் பண்ணலையே நா ஏன் போகணும்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தான் .இப்ப இந்த வீட்டுக்கு வந்து ஒரு  மாசம் ஆகிருச்சு .

நேத்து வேலைக்கு போயிட்டு வந்தா ,ஹவுஸ் ஓனர் வந்து யாரோ ஒருத்தர் உங்க மகன தேடி வந்தாரு .கலர் ட்ரெஸ்ல இருந்தாரு .ஆனா போலீஸ் மாதிரி இருந்ததுனு சொன்னாங்க .படபடன்னு போய் பாத்தா கதவு பூட்டியிருந்தது .தட்டி தட்டி தெறக்கல. அப்புறம் என் தம்பிய கூப்பிட்டு கதவை ஒடச்சு பாத்தா எல்லாம் உடைஞ்சு போச்சு .

எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளத்தேன். தைரியம் சொல்லி சொல்லி வச்சிருந்தேன் . எப்படியெல்லாம் காப்பாத்தியும் எம்புள்ளைய வாழ விடாம பண்ணிட்டாங்களே ..."


No comments: