Monday 7 September 2015

ஆடும்வரை ஆட்டம்

அம்மா பெரிய மெஜாரிட்டியோட ஜெயிச்சு சி எம் ஆனதும் அப்புறம் சொத்து வழக்கு கேஸ்ல உள்ள போனதும் அப்புறம் ஒரு வழியா வெளிய வந்ததும்  தெரிஞ்ச சேதி .இந்த உள்ள வெளிய கேப்ல நம்ம தமிழ்நாடு தள்ளாடியதும் கூட நமக்கெல்லாம் தெரிஞ்ச மேட்டர் .

அம்மா மீண்டும் மக்கள் முதல்வர் போஸ்ட்லிருந்து   விலகி சாதாரண முதல்வர்  ( நன்றி ட்விட்டர் )ஆனதும் நிலைமை கொஞ்சம் சரியாகும்ன்னு எதிர்பார்த்திருந்தோம்ன்னா நாமெல்லாம் முட்டாள்  கூட்டம் .அம்மா வந்த நாளிலிருந்து  கொஞ்சம் டல்லா இருந்தது என்னவோ நிஜம் .அதோட ஒரு ஹைலைட் ரேஞ்சுக்கு பதவியேற்பு அப்புறம் இங்கே திறப்பு விழாக்கள் வீடியோ கான்பிரென்ஸிங்க் மூலம்  மட்டும்ங்கற கான்செப்ட் தொடங்கி   ஆக்டிவிட்டி லெவல் எப்பவும் விடவும்   குறைவு தான் .

ஆனாலும்  திமுகவுக்கு பெரிய ஆதரவு இல்லைங்கற மாதிரியும் எதிர்க்கட்சின்னு ஒண்ணு இல்லாத மாதிரியும் அம்மாவுக்கு சொற்ப அறுபது கோடிக்கு இப்படியான்னு அனுதாபம் இருக்கிற மாதிரி தெரிஞ்சதும் உண்மைதான் .

இதுக்கு நடுவுல சட்டசபை கூடாம இருந்ததும் வேற ஏதும் பெரிய திட்டங்கள்  (அல்லது ) திட்ட அறிவிப்புகள் இல்லாம போனதும் அப்புறம் நாமெல்லாம் ஆவலா எதிர்பார்த்த மந்திரிசபை மாற்றங்கள் இல்லாம இருந்ததும் அம்மாவுக்கு ஏதோ உடல் நலக்குறைவு ன்னு  புரளிகள் ? கெளப்பி விட்டதும் ...

சரி இதெல்லாம் முடிஞ்சு ..ஏதோ ஒன்றிரண்டு திட்டங்கள் அறிவிப்பு ...முடக்கப்பட்ட திட்டங்கள் வேகம் அதிகரிப்புன்னு ஆட்சின்னு  ஒண்ணு ஆரம்பிச்ச மாதிரி தெரிஞ்சுது ..தெரிஞ்சுதா ...

மதுவிலக்கு போராட்டம் பரபரப்பா போக ,அத அரசு  அலட்சியம் செய்த விஷயம் கொஞ்சம் கடுப்ப கெளப்புற நேரத்துல போய்  இந்த ஈவிகேஎஸ்  இளங்கோவன் வாய்க்கு வந்தத பேசி வம்புக்கு போக , ஆரம்பிச்சது  கெரகம் .மகளிர் அணி ஆபாச போராட்டம் -கொடும்பாவி எரிப்பு - கொலை மிரட்டல்ன்னு  இளங்கோவனே  கூச்சப்படுற அளவுக்கு அறப்போர்  நடத்தி ஆட்சியின் மூடுவிழாவுக்கு திறப்பு விழா நடத்தினாங்கன்னு தான் கட்சிக்காரங்க  மெச்சிக்கணும் ..இன்னைக்கு காலைல பார்த்தா வழியில இருக்கிற எல்லா பூங்காவிலேயும் அம்மா படத்த டப்பால ஒட்டி தொங்க விட்டிருக்காங்க ..அம்மா டப்பா திட்டம் போல ...

யோசிக்க யோசிக்க அதிமுகவோட முதல் ஆட்சி தான் நெனப்புக்கு  வருது ...