Monday 12 August 2013

சாளரத்தில்




எவர்க்கும் எட்டாத
ஒற்றை சாளரத்தில்
நின்றிருக்கிறேன்
கண்  எட்டும் தொலைவெங்கும்
வடிந்து கிடக்கிறது
நான் கடந்த பாதை


இடியாப்ப சிக்கல்களாய்
பிணைந்து பிரிந்து
ஒற்றை நூலாய்
அயர்ந்து மெலிந்து
எட்டியிருக்கிறது
சாளரம் வரையும்


பாதை முழுமையும்
வெம்பிக் கிடக்கின்றன
வலிய  கொய்தவையாய் 
என் விழிகளும்
காற்றில் மூச்சுரைத்து
கரைந்து கிடக்கின்றன
அவ்விழிகளுள் வசித்த கனவுகளும்

சாளரம் ஏகி  
அவை மட்டுமே
ஆதரவாய்
என் கூந்தல் வருடி போகும்
அவ்வேளை
மென்வருடலாய்
என் கைகள் அணைந்து போகும்
காலம் சுமந்து வந்த
என் கவிதையொன்றும் .....